இரட்டை குழந்தைகளின் உயிரைப் பறித்த டெங்கு – சென்னையில் நடந்த பரிதாபம்..!


டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவருக்கு மனைவி ஜெகலட்சுமி மற்றும் இரட்டை குழந்தைகளான தீக்‌ஷா மற்றும் தக்‌ஷன் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய குழந்தைகள் இருவரையும் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு இரண்டு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தைகள் இருவரும் இன்று (திங்கள்கிழமை) காலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் ‘டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியச் சம்பவம் மாதவரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!