என்க்கு முன்பே தெரியும்… ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியால் பரபரப்பு..!


பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயி தெரிவித்துள்ள பாலியல் புகாரை நம்புவதாக ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரைஹானா தெரிவித்துள்ளார்.

‘மீ டூ ‘இயக்கத்தின் மூலம் பிரபலங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் பாடலாசிரியர் வைரமுத்து, சின்மயி, ராதாரவி, தியாகராஜன், அர்ஜூன் ஆகியோர் சிக்கியுள்ளனர்.

சின்மயி கூறுவதை ஏற்க முடியாது என ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பல பெண்கள் சின்மயிக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் வருகின்றனர்.

அந்த வரிசையில் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ரைஹானா சின்மயி சொல்வதை நம்புவதாகவும், வைரமுத்து மற்ற பெண்களிடம் நடந்து கொள்வதை குறித்து முன்பே கேள்விப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சியடைந்துள்ளாராம்.-Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!