கணவன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய மனைவி..!! அதிர வைத்த காரணம்..!!


சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கதிரவன். ஐ.டி. ஊழியரான இவருக்கும் அனிதா என்பவருக்கும் கடந்த 20 நாட்களுக்குமுன் திருமணம் நடந்தது. புதுமண தம்பதியர் நேற்று திருவான்மியூர் கடற்கரைக்கு வந்திருந்தனர். அப்போது பைக்கில் வந்த இரண்டு நபர்கள் கதிரவன் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால் நிலைகுலைந்து கதிரவன் விழுந்ததும், அனிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் செயின் மற்றும் செல்போனை பறித்துகொண்டு தப்பி ஓடினர்.

காயமடைந்த கதிரவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதல் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளை முயற்சியில் தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை அடையாளம் காண முயன்றனர்.

அதேசமயம், கதிரவனின் மனைவி அனிதாவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் தன் ஆண் நண்பர் மூலம் கணவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளார். இதனையடுத்து அனிதாவை போலீசார் கைது செய்தனர். அவரது ஆண் நண்பரும் சிக்கினார். இந்த சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!