உப்புத் தண்ணீரை பருகுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன..?


உப்பு என்றதும் எம்மவர்கள் யாரும் வியப்படைய மாட்டார்கள். ஏனெனில் நாம் உணவு சமைக்கும் போது இதனை பயன்படுத்துவதால் இது பழகிப் போனதொன்றாகி விட்டது. எனினும், உப்பும் ஒருவகையில் மருத்துவ குணம் பொதிந்தது தான் என்பதை எம்மில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

இந்த உப்பை வைத்தே பல்வேறு விடயங்களுக்கு தீர்வு காணலாம். அது எப்படி என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
01. கால்வாசிக் கோப்பை மிதமான சுடுநீர்
02. 2 தேக்கரண்டி கடலுப்பு

செய்முறை
பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் தண்ணீரை நிரப்பி உப்பைக் கலந்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை பருகுதல் வேண்டும். பின்னர் சில நாட்களுக்கு இடைவெளி விட்டு மீண்டும் இவ்வாறு செய்வதை தொடர வேண்டும்.

உப்புத் தண்ணீரை பருகுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?


01. உப்புத் தண்ணீரானது எச்சில் சுரப்பதை அதிகரிப்பதோடு அமைலஸ் எனும் நொதியத்தையும் சுரக்க வைக்கின்றது. இந்த நொதியம் உணவு சமிபாட்டை துரிதப்படுத்த உதவுகின்றது. அத்துடன் நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கும் இதுவே மூல காரணமாக அமைகின்றது.

02. எமது உடம்பில் உள்ள நச்சுத் தன்மை வாய்ந்த அல்லது கேடு விளைவிக்கக் கூடிய பொருட்களை அகற்றும் செயற்பாட்டிற்கு தேவையான கனியுப்புக்கள் உப்புத் தண்ணீரில் உள்ளது. இதன் மூலம் உடம்பில் உள்ள நச்சுப் பொருட்கள் மற்றும் பக்டீரியாக்கள் என்பன அகற்றப்படும்.

03. இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை சீர்செய்து ஒஸ்ரியோபுரோசிஸ் போன்ற என்பு நோய்கள் ஏற்படுவதை தடுக்கின்றது.

04. உப்புத் தண்ணீரில் காணப்படும் ஸிங்க், சல்பர், குரோமியம் மற்றும் அயடின் என்பன தோல் சுகாதாரத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய காரணிகள் ஆகும். இவை தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு என்பவற்றை இல்லாமல் ஆக்குவதோடு தோலை இளமையாக வைத்திருக்க உதவி புரிகின்றது.

05. உப்பானது பசியைக் குறைக்கும் வல்லமை கொண்டது. இதனால் உணவு உட்கொள்வது குறைக்கப்பட்டு எடை குறைவடையும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!