தூங்குவதற்கு முன்பு ஆப்பிள் சிடர் விநாகிரியை குடிப்பதால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்!!!


ஆப்பிள் சிடர் விநாகிரி பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வைத் தருவது அணைவரும் நன்கறிந்ததே. இது இரத்தத்தில் குலுக்கோஸ் அளவை சீராக்குதல், உடல் எடை குறைத்தல், உடலைத் தொற்றுக்களில் இருந்து பாதுகாத்தல் போன்ற பல தொற்றுக்களில் இருந்து தீர்வைத் தருகின்றது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை.

இதில் காணப்படும் பொட்டாசியம், அமினோஅமிலங்கள், நொதிகள், மக்னீசியம், புரோபயோட்டிக், ஆண்டிஒக்ஸிடன் போன்றனவே உடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஆப்பிள் சிடர் விநாகிரியை பயன்படுத்துவதனால் கிடைக்கும் நன்மைகள்.

1. தொண்டைவலியை குணப்படுத்தும்.
தொண்டை வலி ஏற்பட்டால் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சிடர் விநாகிரியும், அரை மணி நேரத்திற்கு முன் ஒரு தேக்கரண்டியும், தூங்குவதற்கு முன் ஒரு தேக்கரண்டியும் எடுத்துக் கொள்வது சிறந்தது.

2. வயிற்றின் அமிலத் தன்மையைக் குறைக்கும்.
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சிடர் விநாகிரியை ஒரு கோப்பை நீரில் கலந்து குடிப்பதனால் வயிற்றின் அமிலத் தன்மை குறைவடையும்.

3. சமிபாடு அடையாமல் இருப்பதை தடுக்கும்.
தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சிடர் விநாகிரியை தேன் மற்றும் நீரில் கலந்து குடிப்பதனால் சமிபாட்டு பிரச்சினை நீங்கும்.

4. வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
வாயில் உள்ள பக்டீரியாக்களை அழித்து வாய் துர்நாற்றத்தை நீக்கும்.


5. கால்வலியைக் குறைக்கும்.
சில நாட்களிற்கு 2 தேக்கரண்டி ஆப்பிள் சிடர் விநாகிரியுடன் நீரைக் கலந்து குடிக்கும் போது அதில் காணப்படும் அதிகளவான பொட்டாசியம் கால் வலியைக் குணப்படுத்தும்.

6. உடல் எடையைக் குறைக்கும்.
படுக்கைக்கு செல்வதற்கு முன் உங்களுக்கு பசி ஏற்பட்டால் ஆப்பிள் சிடர் விநாகிரியை கலந்து குடிப்பதனால் சிறந்த பலனைப் பெற முடியும்.

7. தூக்கமின்மையைத் தடுக்கும்.
தினமும் 2 தேக்கரண்டி ஆப்பிள் சிடர் விநாகிரியை குடிப்பதனால் தூக்கமினை பிரச்சினை தீரும்.

8. வயிற்று வலியை நீக்கும்.
வயிற்று வலியை நீக்குவதற்கு ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சிடர் விநாகிரியை சூடான நீரில் கலந்து தூங்குவதற்கு முன் குடிப்பது சிறந்தது.

9. ஒவ்வாமையைக் குணப்படுத்தும்.
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஆப்பிள் சிடர் விநாகிரியை கலந்து குடிப்பதனால் ஒவ்வாமையைக் குணப்படுத்த முடியும்.

10. விக்கலைத் தடுக்கும்.
ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சிடர் விநாகிரி தொண்டைப் பகுதியில் உள்ள நரம்புகளைத் தூண்டுவதனால் விக்கலைத் தடுக்க முடியும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!