வீட்டு வாசலில் இந்த நாட்களில் மாவிலை தோரணம் கட்டினால் அதிஷ்டமாம்..!!


இவ்வுலகில் மக்கள் வாயை கட்டி வயிற்றைக் கட்டி கடனை வாங்கி வீடு கட்டுகிறார்கள். ஆனால் நாலெழுத்து படித்தவர்கள் நான்கு மூலையை சுற்றிப் பார்த்து விட்டு வாஸ்து சரியில்லை, இந்தப் பக்கத்தை இடிக்க வேண்டும் என்கிறார்கள். பணம் இருப்பவர்கள் அவர்கள் சொன்னபடி வீட்டை இடித்துக் கட்டுகிறார்கள். ஆனால் பணம் இல்லாதவர்கள் கடனை வாங்கி கட்டிய வீட்டை எவ்வாறு இடித்துக் கட்ட முடியும். அவ்வாறு வீடு இடித்துக் கட்டாமல் இருப்பதற்கு வழி உண்டா?

ஒவ்வொரு வீடுகளுக்கும் அதற்கு கட்டக்கூடிய அமைப்பின்படி வயது உண்டு. நாம் ஒரு கல்லைச் சிலையாக செய்ய வேண்டும் என்றால் கூட அந்த கல்லை ஆண் கல்லா , பெண் கல்லா என்று பார்க்க வேண்டும். ஆண் கல் என்றால் கல் மதம் வரும். பெண் கல் என்றால் கல் பிசின் வரும். அலித்தன்மை உள்ள கல்லுக்கு கல் மதமும், கல் பிசினும் வரும். இவ்வாறு கல்லில் மூன்று வகைகள் உண்டு. பெண் கல் என்றால் பெண் சிலையாக வடிக்க வேண்டும். ஆண் கல் என்றால் ஆண் சிலையாக வடிக்க வேண்டும். சிற்பி கல் சிலையை செதுக்கும் பொழுது அவருடைய கால்கள் சிலையின் எந்த பாகத்திலும் படலாம்.


சிற்பி உருவத்தை முழுமையாக செதுக்கிவிட்டு கை விரல்களில் நான்கை மட்டும் செதுக்கி பின் கண்களை திறந்து விட்டால் சிலைக்கு உயிர் உண்டாகிவிடும். அதற்குப் பின் சிற்பியின் கால்கள் சிலையின் மேல் படக்கூடாது. ஏன் என்றால், கண்ணை திறந்து விட்டால் அந்தச் சிலைக்கு உயிர் வந்துவிடும்.

அதேபோல் தான் வீடுகளும். வீட்டுக்கு புரோகிதர்களை அழைத்து வந்து யாகம் வளர்த்து பால் காய்ச்சி, பசுமாட்டை கொண்டு வந்து பொங்கல் வைத்து மாட்டுக்குக் கொடுத்து அனைவரும் மகிழ்ந்து கட்டிய வீட்டை எப்படி இடித்து ஒச்சப்படுத்துவது.


யாகம் வளர்த்து பால் காய்ச்சி விட்டால் வீட்டுக்கு உயிர் உண்டாகி விடும். அப்படி உயிர் உள்ள விட்டை எப்படி ஒச்சப்படுத் துவது. விதி என்று இருந்தால் மதி என்று ஒன்று இருக்கும். ஜாதகம் பார்த்தால் எவ்வாறு பரிகாரம் கூறுகிறார்களோ , அதே போல் வாஸ்து முறைகளிலும் பரிகாரம் உண்டு.

மயனுக்குப் பிடித்தது மாமரம். மா மரத்தின் பதினொறு இலையை வளர்பிறையில் சனிக்கிழமை அன்று கட்ட வேண்டும். இந்த சனிக்கிழமை கட்டினால் அடுத்த சனிக்கிழமை கழட்டிவிட வேண்டும். இப்படி ஒரு ஆண்டுக்கு கட்டினால் 100 வருடம் வரை அந்த வீட்டுக்கு உயிர் உண்டாகிவிடும்.


அதிகமாக கஷ்டம் இருந்தால் 108 இலையை அதே போல் ஒரு ஆண்டுக்கு கட்டிவர கஷ்டம் அகன்று நன்மை உண்டாகும். ஆகையால் மங்களகரமாக இருக்க ” மா” இலையை கட்டி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!