இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கும் அன்னாசி… நம்ப முடியலையா.. அட இப்படி குடிங்க..!


நீரிழிவு நோய் பற்றி அதிகாமன விழிப்புணர்வு இருப்பதனால் அதற்குறிய உணவுகளை எடுத்து இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.

மாப்பொருட்கள் அதிகமுள்ள உணவுகள் குளுக்கோசின் அளவை அதிகரிக்க செய்கின்றது.ஊட்டச்சத்து நிறைந்த பழங்களிலும் மாப்பொருட்கள் அதிகம் நிறைந்திருப்பதால் இப் பழ்ங்களை குறைந்த அளவு உட்கொள்ள முடியும்.

நமது உணவில் ஊட்டச்சத்துக்கள்,கனியுப்பு,விட்டமின் நிறைவாகவும் மாப்பொருட்கள்,கொழுப்பு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நாம் உண்ணும் உணவில் உள்ள மாப்பொருட்களை மதிப்பீடு செய்ய பின்வரும் காரணிகள் உதவுகின்றன.

(1) உடல் எடை
(2) உடற்பயிற்சி
(3) குளுக்கோஸ் அளவு
(4) மருந்துகள்

மாப்பொருட்களை சரியாக பேணுவதற்கு 15-20கிராம் சிற்றூண்டிகளிலும் 45-60 கிராம் மாபொருட்களை உணவிலும் சேர்த்துக் கொள்ள முடியும்.


அன்னாசியும்,இரத்தத்தின் சர்க்கரையும்

அன்னாசிப்பழத்தில் விட்டமின் சி அதிகமாகவும் சோடியத்தின் அளவு குறைவாக உள்ளது. புதிய அன்னாசிப்பழம் அல்லது குளிர்ரூட்டபட்ட அன்னாசிப்பழதில் மாப்பொருட்கள் குறைவாகவே உள்ளன. அன்னாசிப்பழத்தில் அதிகம் சர்க்கரை இருப்பதால் நீரிழிவு நோயாளர்கள் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

பருப்பு வகைகள்,பார்லி,கோதுமை ரொட்டி போன்றவற்றுடன் அன்னாசியை சேர்த்து உண்ணும் போது இரத்தத்தின் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை தவிர்க்க முடியும்.

அன்னாசியை வெள்ளை ரொட்டி,பிஸ்கட்,உருளைகிழங்கு போன்ற உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கவே செய்கின்றது.

புதிய மற்றும் குளிர்ரூட்டப்பட்ட அன்னாசியில் குறைந்த அளவு மாப்பொருட்கள் இருப்பினும்,அன்னாசிப்பழச்சாறு மற்றும் காய்ந்த அன்னாசியில் சர்க்கரையின் அளவு அதிகமாகவே உள்ளது.

இதனால் நீரிழிவு நோயாளர்கள் அன்னாசிப்பழச்சாறு மற்றும் காய்ந்த அன்னாசியை தவிர்க்க வேண்டும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!