இரத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்க தினமும் வெறும் வயிற்றில் இதை குடித்தாலே போதும்..!


நீங்கள் களைப்பாக உணர்ந்தால் அதற்கு காரணம் உடலில் போதியளவு சக்தி இல்லை என்பதோ அல்லது ஜலதோக்ஷம், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டது காரணமாக இருக்கும்.

என் நம்புகிறீர்களா? உங்கள் களைப்புக்கு காரணம் இவை மட்டுமல்ல போதியளவு இரத்தம் இல்லாமால் போவதுமே.

குறிப்பாக சிவப்பு அணுக்கள் குறைந்தால் களைப்பு அதிகமாகும்.

இதை இலகுவாக சீராக்க முடியும். வீட்டில் தயாரிக்கப்படு ஒரு சிறந்த பான வகையை வருடத்தில் இரு முறை 15 முதல் 20 நாட்கள் காலையில் வெறு வயிற்றில் குடித்து வந்தால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

தேவையானவை:

• பீற்றூட் – 1 கிலோ

• கரட் – ½ கிலோ

• தோடம்பழம் – 2 அல்லது 3

• எலுமிச்சப்பழம் – 1

• புளிப்பான ஆப்பிள் – 2

• சுத்தமான தேன் -500 கிராம்.

செய்முறை:

ஆப்பிள், கரட், பீற்றூட்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டி பிளண்டரில் அரைத்துக் கொள்ளவும்.

அதில் இருந்து சாற்றை தனியாக வடித்து எடுத்து அதில் எலுமிச்சப்பழச் சாறு, தோடம்பழச் சாற்றை சேர்த்துக் கொள்ளவும்.

இறுதியில் தேனைச் சேர்த்து நன்றாக கலக்கவும். பானத்தின் சுவையை அதிகரிப்பதற்கு தோடம்பழத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் 1000 முதல் 2000 மில்லி லீட்டர் பானத்தை பெற முடியும். இதனை 15 முதல் 20 நாட்கள் வரை தினமும் 100 மில்லி லீட்டர் என்ற அளவில் குடிக்கவும்.

ஏன் பீற்றூட் சாப்பிட வேண்டும் தெரியுமா?

பீற்றூட் அதிக சர்க்கரை நிறைந்த காய் வகை. இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவஐகள் சாப்பிடுவதனால் உடலின் ஆரோக்கியத்தை பேண முடியும்.

1. இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

பீற்றூட்டில் உள்ள நைட்ரேட்கள் நைட்ரேட் ஒக்ஸைட்களாக மாறுகின்றன.

இதனால் உடலில் உள்ள இரத்த நரம்புகளை ஆறுதல்படுத்தி இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதுடன் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.


ஒரு கோப்பை பீற்றூட் பானத்தை அருந்துவதனால் 4-5 புள்ளி இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும்.

2. உடலின் திண்மையை அதிகரிக்கும்.

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக ஒரு கோப்பை பீற்றூட் பானத்தை குடிப்பதனால் 16% உடல் திண்மையை அதிகரிக்க முடியும்.

3. வீக்கத்துடன் போராடும்.

பீற்றூட்டில் உள்ள betaine எனும் ஊட்டச்சத்து கலங்களை பாதுகாக்க உதவுவதுடன் உடல் உள் உறுப்புக்களில் ஏற்படும் வீக்கங்களஇல் இருந்து பாதுகாத்து அதன் தொழிற்பாட்டை அதிகரிப்பதுடன் நோய்கல் வராமலும் தடுக்கிறது.

4. புற்றுநோயைத் தடுத்தல்.

பீற்றூட்டில் உள்ள தாவர ஊட்டச்சத்துக்கள் மார்பகம், கணையம், ஆண் உறுப்புக்களில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

5. ஊட்டச்சத்துகளும் நார்ப் பொருட்களும் அதிகம் காணப்படுதல்.

பிறப்பு குறைபாடுகளை நீக்குவதற்கு இதில் உள்ள விட்டமின் பி போலேற் உதவுவதுடன், இதில் காணப்படும்.

விட்டமின் சி, நார்ப் பொருட்கள், பொட்டாசியம் ஆரோக்கியமான நர்ம்புகளிற்கும், தசைகளிற்கும் மங்கனீஸ் எலும்பு, சிறிநீரகம், ஈரல், கணையத்தின் ஆரோக்கியத்திற்கும் கைகொடுக்கிறது.

6. நச்சுக்களை வெளியேற்றுதல்.

இந்த காயில் உள்ள betaline உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி ஈரலையும், இரத்தத்தையும் சுத்தமாக வைத்திருக்க உதவும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!