எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் சளி ,இருமல் குணமாகவில்லையா? இதை தினமும் குடிச்சிப் பாருங்கள்..!


நீங்கள் சளி, இருமலால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? இருமலைக் குணப்படுத்துவதற்காக பல மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று மருந்துகளை உட்கொண்டாலும் அவை போதியளவு தீர்வை தருவதில்லை.

அத்துடன் மருந்துகள் உடலிற்கு பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது வருத்தத்திற்கு உரியதே.

ஆனால் அந்த கவலைகளை தவிர்த்து இந்த முறையினை பின்பற்றினால் சளி முற்றாக நீங்கி இருமலில் இருந்து தீர்வையும் பெறுவீர்கள்.

இந்த முறையை குழந்தைகள், பெரியவர்கள் பின்பற்றலாம்.

இருமலில் இருந்து சிறந்த தீர்வைத் தரும் கரட்

கரட்டின் மருத்துவ குணங்கள்.

• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

• சருமத்தை பொலிவாக வைத்திருக்கும்.

• கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

• இதயத்தின் ஆரோக்கியத்தைப் பேணும்.

• உடலின் நச்சுத் தன்மையை வெளியேற்றும்.


தேவையான பொருட்கள்.

• ½ kg கரட்.

• நீர்

• 4 தேக்கரண்டி தேன்

செய்முறை:

கரட்டின் தோலகளை நீக்கி சுத்தப்படுத்தி அவை மென்மையாகும் வரை அவிக்கவும். அவித்த நீருடன் சேர்த்து பிளண்டரில் அரைத்து அதில் தேனையும் சேர்த்துக் கொள்ளவும்.

நன்றாக சேரும் வரை பிளண்டரில் அரைத்து அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து குளிரூட்டியில் வைக்கவும்.

தினமும் 3 மேசைக்கரண்டி குடிப்பதனால் 2 நாட்களில் நீங்கள் எதிர்பார்த்த தீர்வைப் பெறுவீர்கள்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!