3 நாட்களில் மூட்டு வலியை முற்றிலும் போக்கும் எலுமிச்சப்பழம்… பயன்படுத்துவது எப்படி?


உலகில் உள்ள மிகச் சிறந்த பழ வகைகளில் எலுமிச்சப்பழம் முக்கிய இடத்தை பிடிக்கின்றது, இதில் உடலிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் விட்டமின்கள் செறிந்து காணப்படுவதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றது.

எலுமிச்சப் பழத்தின் மருத்துவ குணங்கள்.

• எலுமிச்சப் பழத்தில் விட்டமின் சி, ஏ, பி1, பி6 போன்ற விட்டமின்கள் காணப்படுவதுடன் போலிக் அமிலம், மக்னீசியம், பொட்டாசியம், பெக்டின், கல்சியம் பொஸ்பரள் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றது.

• இதில் காணப்படும் ஊட்டச்சத்துக்களால் சமிபாட்டு பிரச்சைனைகள், நீரிழிவு நோய், ஈரல், சிறுகுடலில் ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்துவதற்கு கைகொடுக்கின்றது.

• தொடர்ச்சியாக எலுமிச்சப்பழத்தினை சேர்த்துக் கொள்வதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்வதன் மூலம் உடலில் நோய்கள் வராமல் தடுக்கின்றது.

• கர்ப்பினிப் பெண்கள் தினமும் ஒரு கோப்பை நீரில் எலுமிச்சப்பழச் சாற்றை கலந்து குடிப்பதனால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிரச்சினைகளில் இருந்து தீர்வைத் தருகிறது.

• இதில் காணப்படும் வீக்கத்திற்கும் தொற்றுக்களிற்கும் எதிராக செயற்படும் தன்மையினால் இரத்த நரம்புகளையும், நரம்பு வலிகளையும் குணப்படுத்துவதுடன் காய்ச்சலைக் குறைக்கும் தன்மையும் இதில் காணப்படும்.

• இதில் காணப்படும் வீக்கம், வலிகளிற்கு எதிராக செயற்படும் தன்மையினால் மூட்டு வலிகளிற்கு எதிராக செயற்படுகின்றது.


மூட்டு வலிக்கு எலுமிச்சப் பழத்தை பயன்படுத்துவது எப்படி?

 இரண்டு எலுமிச்சப்பழத்தின் தோலினை நீக்கி அதனை ஒரு ஜாடியில் எடுத்துக் கொள்ளவும்.

 அந்த ஜாடியில் ஒலிவ் எண்ணெய் சேர்த்து 15 நாட்களிற்கு மூடி வைக்க வேண்டும்.

 பின்பு அந்த கலவையை துணியில் நனைத்து மூட்டு வலி உள்ள இடத்தில் வைத்து இரவு முழுவதும் மூடி கட்ட வேண்டும்.

 இரண்டாவது முறையில் எலுமிச்சப்பழ தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மூட்டு வலி உள்ள இடத்தில் வைத்து சுற்றிக் கட்டி பல மணி நேரங்கள் விட்டால் மூட்டு வலி குறைந்து விடும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!