வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளதா? நச்சுகள் கூட வெளியேறும்..!


உங்களுக்கு காலை எழுந்தவுடன் வெறு வயிற்றில் நீர் அருந்தும் பழக்கம் உள்ளதா? இல்லையென்றால் இதைபடித்தவுடன் வெறு வயிற்றில் நீர் குடிப்பதை பழக்கப்படுத்துக் கொள்ளுங்கள்.

ஜப்பானிய நாட்டு மக்களிடம் இந்தப் பழக்கம் அதிகம் உள்ளது.

இந்தப் பழக்கத்தினால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றது. அவை:

• ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

• கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைத் தரும்.

• மாதவிடாய் கோளாறுகளை தடுக்கும்.

• தலைவலி வராமல் பாதுகாக்கும்.

• உடலில் கொழுப்பின் அளவை குறைக்கும்.

• உடல் வலிகளை தீர்க்கும்.

• இதயநோய்கள் வராமல் தடுக்கும்.

• மலச்சிக்கலில் இருந்து தீர்வைப் பெற முடியும்.

• இதய துடிப்பை அதிகரிக்கும்.

• சூலகத்தில் ஏற்படும் பிரச்சைனைகளைத் தீர்க்கும்.

• நீரிழிவினால் பாதிக்கப்படாமல் தடுக்கும்.

• காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சைனைகளுக்கு தீர்வைத் தரும்.


நீர் சிகிச்சை முறை.

காலை எழுந்தவுடன் 200ml அல்லது 4 கோப்பை நீரினை அருந்திய பின்னரே பல் துலக்க வேண்டும். நீரைக் குடித்து 45 நிமிடங்களுக்கு எதையும் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

காலை உணவு, பானங்களை உட்கொண்ட பின்பு 2 மணி நேரத்திற்கு வேறு உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.

4 கோப்பை நீரினை கொஞ்சன் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த நீர் சிகிச்சை முறையினை பின்பற்றுவதனால் 10 நாட்களில் வயிற்றெரிச்சல், மலச்சிக்கலை தீர்க்க முடியும்.

30 நாட்களில் உயர் இரத்த அழுத்தத்தையும் நீரிழிவு நோயினையும் கட்டுப்படுத்த முடியும்.

இந்த முறையினால் உடலின் சக்தி அதிகரிப்பதுடன் ஆரோக்கியத்தையும் சிறந்த முறையில் பேணுகின்றது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!