ஆப்பிள் நிறுவனம் தான் அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் முதலிடம்…!


அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறது. ஆப்பிளை தொடர்ந்து சீன நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் 2017 மூன்றாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறது. 2017-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் லாபகரமான காலாண்டாகவும் அமைந்துள்ளது என கனாலிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 39 லட்சம் சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. எல்டிஇ வசதி கொண்ட ஆப்பிள் வாட்ச் 3 விற்பனை அதிகரிக்க காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து சியோமி மற்றும் ஃபிட்பிட் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.


சியோமி நிறுவனம் சுமார் 36 லட்சம் சாதனங்களும், ஃபிட்பிட் நிறுவனம் சுமார் 35 லட்சம் சாதனங்களை விற்பனை செய்துள்ளது. ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களின் விற்பனை அதிகரித்திருந்தாலும், ஒட்டுமொத்த சந்தையில் அணியக்கூடிய சாதனங்களின் விற்பனை இரண்டு சதவிகித சரிவை சந்தித்துள்ளது.

கனாலிஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் சுமார் எட்டு லட்சம் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனை செய்திருக்கலாம் என தெரிவித்திருந்தது. எனினும் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சர்வதேச டேட்டா கார்பரேஷன் வெளியிட்ட தகவல்களில் சியோமி நிறுவனம் அதிகளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!