அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாகும் வெள்ளைப் பூண்டு..!!


வெள்ளை பூண்டில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. இதனை தொடர்ந்து எடுத்து வந்தால் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

வெள்ளை பூண்டை தொடர்ந்து உணவில் சேர்த்து வருபவர்களுக்கு மலேரியா நோய் வராது.

பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் தேவையற்று சேரும் கொழுப்பு குறையும்.


நமது உடலில் சேரும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த, தினமும் காலையில் நான்கு வெள்ளை பூண்டு துண்டுகளை சாப்பிடுவது நல்லது.

வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் பூண்டு சாறு கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.


இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள் உள்ளுக்குள் சாப்பிட கொடுக்க எளிதில் குணம் கிடைக்கும்.

‘டான்ஸில்’ என்கிற உள் நாக்கு வளர்ந்திருப்பவர்கள், அந்த வளர்ந்த உள்நாக்கு சதை வளர்ச்சியின் மீது பூண்டுசாறினை தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.


பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் கொழுப்பு குறையும். ரத்தக்கொதிப்பு, மனஅழுத்தம் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.

பூண்டில் பலவித சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம்தான்.


எனவே, பூண்டை அதிகமாக சமையலில் பயன்படுத்துவதன் மூலமாக, நமது எலும்பிற்கு வருகின்ற பாதிப்புகளில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!