தண்ணீர் குடிக்காமல் உடல் வறட்சியடைந்தால் இவ்வளவு நோய்கள் தாக்குமா..?


மனிதனால் தண்ணீர் இன்றி இரண்டு நாட்கள் மாத்திரமே வாழ முடியும் நமது உடல் எடையில் 2/3 பங்கு நீரினால் உருவாக்கப் பட்டது.

உடலில் உள்ள உறுப்புகள் ,செல் (cell), திசு (tissue). நீரினை தங்கியே இருக்கின்றது. தண்ணீர் எமது உடலின் வெப்பத்தை சீராக்குதல், சமிபாட்டிற்கு உதவுதல், கண் ஈரலிப்பாக இருத்தல்,

மூட்டு தேய்மானம் அடையாமல் இருத்தல், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருத்தல் ,உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருள்ட்களை நீக்குதல் போன்றவற்றை செய்கின்றது.

தினமும் நீரின் அளவு குறை வடைவதால் தொடர்ச்சியான உடல் வறட்சியை ஏற்படுத்தும் என்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

உடல் வறட்சியினால் சாதாரண மனிதர்களை விட நீரிழிவு நோயளர்களும், விளையாட்டு வீரர்களுமே அதிகளவு பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

உடல் வறட்சி அடைவதை ஒவ்வொருவராலும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

உடல் வறட்சி அடைவதை நமக்கு உணர்த்தும் 10 வழிகள்


(1) தலை வலி

உடலில் தண்ணீர் அளவு குறைவடையும் போது தலை வலி எற்படும் உடலுக்கு தேவையான நீர் கிடைக்காத வேளையில் மூளையினை சுற்றியுள்ள திரவத்தின் அளவு குறைவடையும்.

இந்த சந்தர்ப்பத்தில் நாம் அசையும் போது மூளை மண்டையோட்டுக்கு எதிராக அசைவதுடன், பாதிப்படையவும் செய்கின்றது.

இந்த உடல் வறட்சி மூளைக்கு தேவையான ஒக்சிஜன் மற்றும் இரத்தத்தின் அளவைக் குறைவடைய செய்யும்.

ஒரு முகப்படுத்த முடியாமை (கவனம் குறைதல்)
மூளை 90% நீரினால் ஆனது மூளைக்கு தேவையான நீரின் அளவு குறையும் போது அறிவாற்றல், அவர்கள் மனநிலையில் மாற்றம் எற்படுகிறது.

மிதமான உடல் வறட்சியால் மறதி,மனோவியல் திறன்,ன்எண்கணித திறன்,பார்வை,புலனுணர்தல் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுகின்றது. மேலும் கோபம்,குழப்பமான மனநிலை உருவாகின்றது.


(2) இதயத்துடிப்பு

உடல் வறட்சியினால் இதயத்துடிப்பு அதன் செயல்திறன் பாதிப்படைகின்றது.தண்ணீரின் அளவு குறையும் போது இரத்ததில் உள்ள பிலாஸ்மாவின்(PLASMA) அளவு குறைவடைகிறது.
இதனால் இரத்தம் செறிவடைவதுடன்,இரத்த ஓட்டம் பாதிப்படைகின்றது.இதனால் இதயத்துடிப்பு அதிககரிக்கின்றது.

மேலும் உடலில் உள்ள கனியுப்புக்களின் சமநிலை பாதிப்படையும் போது இரத்த அழுத்தம் குறைவடைகின்றது.

பொட்டாசியம், மற்றும் இரத்தத்தின் சர்க்கரையின் அளவு குறைவதானாலும் நெஞ்சுத்துடிப்பு ஏற்படுகின்றது.

(3) வாயில் துர்நாற்றம்

உமிழ்நீர் பக்ட்ரீயாக்களுக்கு எதிராகச்செயல்படுகின்றது.உடல் வறட்சியினால் உமிழ்நீர் அளவு குறைவடைவதனால், வாயிலிருந்து துர்நாற்றம் வெளியேறும்.

மேலும் உமிழ்நீர்பற்களைச் சுற்றி தடையாக இருப்பதால் பற்ச்சிதைவில் இருந்து பாதுகாக்கின்றது.


(4) மலச்சிக்கல்

தண்ணீர் சமிபாடு அடைவதற்கும் உடல் ஊட்டச்சத்துக்களை குறிப்பாக நீரில் கரையும் விட்டமின் சி, பி யை உறிஞ்சிக் கொள்வதற்கும் உதவகின்றது.

மேலும் சமிபாட்டை இலகுவாக்குவதுடன், சமிபாட்டு தொகுதியை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.இதனால் மலச்சிக்கல்,குடல் இயக்கம் பாதிப்படைகின்றது.

(5) பசி ஏற்படுதல்

உடல் வறட்ச்சியினால் பசி போன்ற உணர்வை மூளை தவறாக தூண்டும். அவ்வேளையில் நீர் அருந்தினால் போதுமானது.

(6) சதை மற்றும் மூட்டுக்களில் ஏற்படும் வலி

மூட்டு பகுதியை சுற்றி 65%-85% வரை நீர் காணப்படுகின்றது இப் பகுதிகளில் நீரின் அளவு குறைவடையும் போது எலும்புகள் ஒன்றையொன்றுஉராய்வடையசெய்கின்றன.

இதனால் மூட்டு வலி ஏற்படுகின்றது. நீரின் அளவு குறைவடையும் போது மக்னீசியத்தின் அளவும் குறைவடைகின்றது இந்த சந்தர்பத்தில் சதைப்பிடிப்புக்கள் ஏற்படுகின்றன்.


(7) சோர்வடைதல்

நீரின்மையால் இரத்தத்தின் அளவு குறைவடைந்து இரத்த அழுத்தம் அதிகமாகின்றது.

இவ் வேளையில் உடல் உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் ஒக்சிஜனை வழங்குவதற்கு இதயம் அதிக சக்தியை பயன் படுத்தும். இதனால் உடல் சோர்வடைகின்றது.

(8) உதடு மற்றும் சருமத்தின் பாதிப்பு

உடல் வறட்ச்சியினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை வியர்வை மூலம் வெளியேற்ற முடியாது.மேலும் தோல் சுருக்கமடைகின்றது.

இதனால் எக்சிமா போன்ற சரும நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.உடல் வறட்சியால் உதடு காய்ந்து வெடிப்புகள் ஏற்படுகின்றன.


(9) சிறுநீர் நிறம் மாறுதல்

உடல் வறட்சியால் சிறுநீரில் உள்ள நீர் வடிகட்டுதல் மூலம் மீண்டும். உடலிற்கு செல்வதால் சிறுநீரின் நிறம் மாறுகின்றன. இதனால் தொற்றுக்களும் ஏற்பட வாய்ப்புண்டு.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!