காது கேட்காமல் போவது இன்று பலரிடம் இருக்கும் மிக முக்கிய பிரச்சினை. இதனை குணப்படுத்தாமல் விட்டால் மேலும் அதிகமாக பாதிப்படையும் வாய்ப்புக்கள் உள்ளன.
பெரியவர்கள், அவர்களின் வயது முதிர்வாலும், அதிகமான சத்தத்தினாலும் கேட்கும் சக்தியை இழந்து விடுகின்றனர்.
தினமும் சத்தமான இசையை கேட்பதனாலும், சத்தமான சூழலில் தொடர்ச்சியாக வேலை பார்ப்பதனாலும் காது கேட்கும் சக்தி குறைந்து விடுகின்றன.
மேலும் அதிகப்படியான அழுக்குகள் காதினுள் சேர்வதனாலும், வேறு பொருட்கள் காதில் செல்வதனாலும், காதில் தொற்றுக்கள் மற்றும் காயங்கள் ஏற்படுவதனாலும் காதின் உட்பகுதி பாதிப்படைந்து விடுகின்றது.
சிறியவர்கள் முதல் பெரியவர்களை இதனால் பாதிப்படைகின்றனர். ஆனால் இதற்கு வீட்டிலேயே இயற்கையான தீர்வு உள்ளது.
சிறந்த தீர்வைத் தரும் இயற்கை முறைகள்.
1. பூண்டு மற்றும் ஒலிவ் எண்ணெய்.
பூண்டு காது கேட்பதற்கு மட்டுமன்றி மேலும் பல நோய்களிற்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
தேவையான பொருட்கள்:
• ஒலிவ் எண்ணெய்.
• 3 பூண்டு துண்டுகள்.
• துளிசொட்டி (dropper).
• பஞ்சு மற்றும் துணி.
செய்முறை:
• பூண்டுத் துண்டை ஒலிவ் எண்ணெய்யில் ஊற வைக்கவும்.
• சிறிது நேரத்தின் பின்பு பூண்டுத் துண்டைபிழிந்து சாற்றை எடுத்து அதனை துணியில் வடிகட்டவும்.
• அந்த எண்ணெய்யை துளிசொட்டியின் மூலம் 3 அல்லது 4 துளிகள் விடவும்.
• இறுதியில் காதினை பஞ்சினால் மூடி எண்ணெய் உட்செல்ல விட வேண்டும்.
2. சிவப்பு வைனும் பச்சை தேயிலையும்.
சிவப்பு வைன் காது கேட்காமல் இருப்பதை தடுக்க உதவுகின்றது. பச்சை தேயிலையிலும் இந்த பண்பு உள்ளது.
மேலும் இதில் உள்ள ஆண்டிஒக்ஸிடன் காதின் உட்பகுதிகளில் உள்ள முடிகளை பாதுகாக்க உதவுகின்றது.
3. தேனும் இலவங்கப்பட்டையும்.
சம அளவான தேனும் இலவங்கப்பட்டை பவுடரையும் சேர்த்து தினமும் காலையிலும் தூங்குவதற்கு முன்பும் காதில் விடுவதனால் தீர்வைப் பெற முடியும்.
காதுகளை சிறந்த முறையில் பாதுகாப்பதன் மூலம் காது கேட்கும் திறனை பேண முடியும்.- © tamilvoicenews.com | All Rights Reserved
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!