அசைவப் பிரியர்களே! இறைச்சியுடன் இவற்றை சேர்த்து சாப்பிட்டால் உங்க உயிருக்கே ஆபத்தாம்..!!


அசைவப் பிரியர்கள் தினமும் ஏதாவது அசைவ உணவு தங்களுடைய உணவில் இருப்பதையே விரும்புவார்கள். அப்படி அசைவ உணவுகள் சாப்பிடும்போது, சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியது மிக அவசியம். இல்லையென்றால் இது அசைவ உணவுடன் சேர்த்து செரிமானக் கோளாறுகளை உண்டாக்கிவிடும்.

செரிமானக் கோளாறுகள் மட்டுமல்லாமல் சில உணவுகள் உடலுக்குள் விஷமாகவும் மாறிவிடும். அது தேவையில்லாத ஆரோக்கியக் கோளாறுகளை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக, மட்டன் சாப்பிடும்போது, அது செரிமானம் தாமதமாகும். அதனால் மட்டன் சாப்பிடும்போது நிறைய ஓய்வும் கொடுக்க வேண்டும். சில உணவுகளைச் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும் வேண்டும்.
அப்படி என்னென்ன உணவுகளை அசைவ உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது?…


தேன் – இறைச்சி
சுத்தமான தேனுடன் இறைச்சியைச் சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடுவதால் தேன் உணவை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும். இந்த காம்பினேஷனை ஆயுர்வேதத்தில் ‘ஆம விஷம்’ என்று கூறுவர். இது மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.


முள்ளங்கி – இறைச்சி
வேகவைத்த முள்ளங்கியோடு அசைவ உணவை சேர்த்து சாப்பிடக்கூடாது. முள்ளங்கி மற்றும் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்து அதிகரிப்பதால், உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மை உடையதாக மாற வாய்ப்பு உண்டு.


கிழங்கு வகைகள் – இறைச்சி
பொதுவாகவே, மண்ணுக்கு அடியில் விளையும் உணவுப்பொருட்கள் உண்பதை பெரும்பாலும் தவிர்ப்போம்.

கிழங்குகள் மற்றும் இறைச்சி செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன், அது உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். மேலும் இந்த காம்பினேஷன் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லையை உண்டாக்கும்.


உளுந்து – இறைச்சி
கறுப்பு உளுந்துடன் இறைச்சியைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். செரிமானத்தில் சிரமத்தை ஏற்படுத்துவதோடு வயிற்றுக்கோளாறு, குமட்டல், வாந்தி, படபடப்பு உண்டாக்கும்.


பயறு – இறைச்சி
முளைகட்டிய பயறு மற்றும் இறைச்சியில் புரதம் அதிக அளவு உள்ளது. உடல் இயக்கத்துக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம் என்றபோதிலும் அதை அதிகமாக எடுத்துக்கொள்வதால் மூட்டுவலி ஏற்படும். இது உடலில் மதமதப்பை ஏற்படுத்தி உற்சாகத்தை இழக்கச்செய்யும்.


கீரை – இறைச்சி
இறைச்சியுடன் கீரை சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானக்கோளாறு ஏற்படும். இதனால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!