அக்குள், கழுத்து பகுதிகளில் உள்ள கட்டிகளை வீட்டிலே இயற்கையாக நீக்குவது எப்படி?


நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை சருமத்தில் தோன்றும் சிரு கட்டிகளும்,மருக்களும்.ஆனால் இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை.

இக் கட்டிகள் சரும நிறத்திலும் அல்லது சிறிது வெளிர் நிறத்திலும் முடிச்சுக்கள் போன்று காணப்படுகின்றன.

இதனுடைய அளவு 1mm இல் இருந்து 1cm வரை வேருபடுகின்றது.

இவை அதிகமாக அக்குள் பகுதி,கழுத்து,கண் இமை,வயிறு,மார்பகப் பகுதிகளிற்கு கீழே தோன்றுகின்றன்.

இது பொதுவான சரும பிரச்சனையாக இருந்த போதிலும்,ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை ஆனால் இவை பார்ப்பதற்கு கவர்ச்சிய்ற்றதாக இருப்பதால் எவ்வாறு விடுபடுவது என்பது எல்லோருக்கும் முக்கியமனதாக உள்ளது.

சில நேரங்களில் இதன் அளவு அதிகரித்தல், இரத்தக்கசிவு,வீக்கம் என்பவை சவாலாகவே இருக்கைகின்றன.

அதிகமான கொழுப்புக்கள் படிவதாலே இக் கட்டிகள் உருவாகின்றன.


இந்த கட்டிகளை குளிர்காலத்தில் நீக்குவதே சிறந்தது.ஏனெனில் குளிரான காலநிலையில் உடல் வியர்வையை தவிர்க்க முடியும்.

இதை நீக்குவதற்கு சிறந்த வழிமுறையாக சத்திர சிகிச்சை,மின்சார அல்லது கதிர் வீச்சை பயன்படுத்தி செய்யப்படும் சிகிச்சை பயனளித்த போதிலும்,இச் சிகிச்சை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியுள்ளது.

சிகிச்சையின் பின்னர் வைத்தியரின் ஆலோசனையின் படி மருந்த்துகள்,குளித்தல்,சுகாதரமாக இருத்தல் போன்றவற்றை குறைந்தது 5 நாட்களுக்காவது பின்பற்ற வேண்டும்.

மேலும் சிறிது நாட்களுக்கு அதிகமான உடல் அசைவுகளை குறைத்து வியர்வையை தடுக்க வேண்டும்.

ஆனால் ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுத்துவதன் மூலம் எளிதான தீர்வை பெற முடியும்.


பயன்படுதும் முறை

கட்டி,மருக்கள் உள்ள பகுதியை சவர்க்காரம்,தண்ணீர் மூலம் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

பின்னர் நீரில் நனைக்கப்பட்ட பஞ்சினால் கட்டியினை ஈரப்படுத்திய பின்னர் பஞ்சின் மூலம் ஆப்பிள் சிடர் வினாகிரி தடவ வேண்டும் பின்னர் துணியினால் மூடிக்கட்ட வேண்டும்.

தொடர்ச்சியான பாவனை

முதல் முறை இந்த சிகிச்சை செய்யும் போது மருக்கள் நிறமாறி காய்ந்து தானாக கீழே விழுந்து விடும்.

பொதுவாக இச் சிகிச்சையால் அடையாளங்கள் எதுவும் வருவதில்லை,மருக்கள் காய்ந்து வரும் போது ஆப்பிள் சிடர் வினாகிரி தடவுவதை நிறுத்த வேண்டும்.

ஆனால் இதை கண்களிற்கு அருகில் உள்ள பகுதிகளில் தடவ வேண்டும்.

அத்துடன் எரிச்சல் உருவாகினால் இந்த முறையை பின்பற்ற வேண்டாம்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!