குட்டி தூக்கத்தை தவிர்ப்பவர்கள் மட்டும் கட்டாயம் படிங்க..!


மனிதர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கம் மிக முக்கியமானது தூக்கம் ஒருவருடைய படைப்பாற்றலையும் சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கிறது.

திடீரென உடலும் மூளையும் சோர்வடைந்து செயலிழக்கும் போது தூக்கம் அவர்களின் புத்துணர்ச்சிக்கும் மறுதொடர்ச்சிக்கும் உறுதுணையாகின்றது.

ஆப்பிள், கூகிள் போன்ற பல பெரிய நிறுவனங்கள் அவர்களது பணியாளர்களுக்கு குட்டித் தூக்கத்திற்கு அவகாசம் அளிக்கின்றான்.

குட்டித் தூக்கம் சாதாரணமாக இருப்பினும் பல நன்மைகளை தருவதுடன் தூக்கம் அலை சுழற்ச்சி இன் சந்ததிற்கு இன்றியமையாதது.

ஒரு முழு நாளில் நமது சக்தியின் அளவு உன்னிப்பாக கவனிக்கும் ஆற்றல் வேறுபடும் இந்த சந்தர்ப்பங்களில் நமது பணிகளை தொடர்வதற்கும் சக்தியின் அளவை அதிகரிப்பதற்கும் தூக்கம் அவசியமானது.

குட்டி தூக்கத்தை தவிர்க்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக பதட்டம் அதிகரிப்பதுடன் சந்தோசம் ஆர்வம் குறைவடைவதை கொலராடோ பால்டர் பல்கலைக்கழக ஆய்வின் போது நிரூபித்துள்ளனர்.

berlogy…. மற்றும் சில ஆய்வாளர்களின் ஆய்வின் போது குட்டித்தூக்கம் பெரியவர்களுக்கும் நன்மையை தருவது என நிரூபித்துள்ளனர்.

பெரியவர்களின் குட்டித்தூக்கம் ஞாபக சக்தி கற்கும் ஆற்றலை புதுப்பித்து சிறப்பாக செயல் பட செய்கிறது.

குட்டி துக்கம் என்பது எவ்வளவு நேரம்

குட்டித்தூக்கம் என்பது 10 முதல் 20 நிமிடம் வரை சரியானது என்பது நிபுணர்கள் கருத்து. இது தூக்கத்தை விட குறைவான காலப்பகுதியாக இருக்க வேண்டும்.

20 நிமிடங்களை விட தூக்கத்தை தொடரும் போது நமக்கு தடுமாற்றம் உருவாகிறது.

ஒரு மணி நேரத்திற்கு மேல் தூங்கும் போது ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுகின்றோம். இதிலிருந்து திடீரென விழிக்கும் போது உடல் மிகவும் சோர்வடைந்து விடுகிறது.

இரவு நேரங்களில் சரியாக துங்காதவர்கள் 90 நிமிடங்கள் வரை சிறு தூக்கத்தை தொடகின்றனர்.

நித்திரை நமக்கு சாதகமாக உடலை மாற்றுவதுடன் படைப்பாற்றலையும் சிந்திக்கும் திறனையும் அதிகப்படுத்துகின்றது.

தேவையான நேரத்தில் எடுக்கும் குட்டி தூக்கமும் இரவு நேர சரியான நித்திரை ஆரோக்கியமான வாழ்விற்கு உறுதுணையாகின்றது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!