திரை மறைவாக தொப்புள்கொடியை வைத்து லட்ச லட்சமாய் நடக்கும் வியாபாரம்.!! ஏன் தெரியுமா..?


சமீபகாலமாக, தனியார் மருத்துவமனைகளில், ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால், உங்கள் குழந்தையின் “ஸ்டெம்செல்லை” அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்கின்ற கேள்வியை மருத்துவமனை நிர்வாகம் சார்பாக முன்வைக்கப்படுகிறது.

அப்படி, தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது.

தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும்..? என்ற கேள்வி எழுகிறதா….?


அந்த குழந்தைகள் வளர்ந்து, பெரியவர்கள் ஆகும்போது அவர்களுக்கு குணப்படுத்த முடியாத நோய்கள் ஏற்பட்டால் இந்த ஸ்டெம்செல்கள்கள் வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே.., நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?

அந்த காலத்தில், குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன், அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.


இல்லையென்றால், குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து, அதை நன்றாக காய வைத்து அரைத்து பொடியாக்கிய பின்பு, அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தைகளின் இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.

பிற்காலத்தில், அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும்.

இன்றும் சில வீடுகளில் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் உள்ளது. ஆனால், பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் மிகவும் வருத்தமான செய்தி.


இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை, மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து…, தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி.., நம்மை முட்டாளாக்கி.., இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்.

உண்மையில் இன்று நாம் முட்டாளா……? இல்லை, நம் முன்னோர்கள் முட்டாளா…..? என்று சிந்தித்து பார் தமிழா… இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!