மாதுளம் பழத்தை விரும்பாதவர்கள் யாருமே இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனெனில் மாதுளம் பழம் அந்த அளவுக்கு சுவை மிக்கது.
சிறுவர்கள் இதனை விரும்பி உண்பர். இப்படிப்பட்ட மாதுளம் பழத்தில், மருத்துவ குணங்களும் பொதிந்துள்ளது.
மாதுளம் பழத்தில் மாத்திரம் அன்றி மாதுளம் பழத்தின் பூவிலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இந்த இரண்டையும் உட்கொள்வதன் மூலம், பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
அவை என்ன என்பதை இப்போது நாம் பார்ப்போம்!
01. நோயின் பாதிப்பால் பலவீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறுவதுடன், உடல் எடையும் கூடும்.
02. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று வகைகள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. புளிப்பு மாதுளையை உட்கொண்டால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
அத்துடன் இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாக அமைகிறது. மேலும் தடைபட்ட சிறுநீரை வெளியேற்றல், பித்தநோய்களை நிவர்த்தி செய்தல், குடற்புண்களை ஆற்றுதல் போன்ற செயற்பாடுகளையும் செய்கின்றது.
03. ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் ஆண்மை விருத்தியடைகின்றது.
04. மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும்.
05. மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும்.
06. மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாதத்திலேயே உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும்.
07. மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
08. மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
09. மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும்.
10. மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நிவர்த்தியாகும். – © tamilvoicenews.com | All Rights Reserved
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!