இந்தியாவில் ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல் சேவையிலும் பாதிப்பு..!


ஏர்செல்லை தொடர்ந்து நாடு முழுவதும் ஏர்டெல் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சிக்னல் கிடைக்காமல் அவதியுற்றதை தொடர்ந்து அந்நிறுவனம் திவாலானது என அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த வாடிக்கையாளர்கள் தற்போது எம்என்பி போர்ட் மூலம் நம்பரை மாற்றாமலேயே வேறு நெட்வொர்க்கிற்கு மாறி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது ஏர்செல்லைப் போன்று ஏர்டெல் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் சிக்னல் கிடைக்காமல் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.

தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில், சேவை பாதிப்பு குறித்து வருத்தம் தெரிவித்தது. அதில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையின் சில இடங்களில் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், தற்போது அந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சிக்னல் தற்போது கிடைக்காதவர்கள், தங்களது செல்போனை ஒரு முறை ஸ்விட்ச் ஆப் செய்து ஆன் செய்யும்படி கேட்டுக்கொண்டது.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!