ஒரே வாரத்தில் தலைமுடி உதிர்வதை தடுக்கும் ஆவாரம்பூ.. எப்படி தெரியுமா..?


முடி உதிர்வு என்பது இப்போது எல்லோருக்கும் பொதுவாக உள்ள பிரச்சினை ஆகும். கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த இயற்கை முறையில் தீர்வு காண்பதே சிறந்தது. இப்போது போலல்லாமல் பண்டைய காலங்களில் கூந்தலைப் பராமரிக்க பல அற்புத மூலிகைகளை பயன்படுத்தினர்.

இந்த முறை இப்போதும் கூட கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் பலருக்கு இது தொடர்பில் போதிய அறிவில்லாதிருக்கின்றது என்பதே உண்மை.

பண்டைய காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த அந்த முறைகள் உங்களுக்காக இதோ!

01. வெட்டிவேர் – 10 கிராம், பட்டை – 100 கிராம், வெந்தயம் – 2 தேக்கரண்டி ஆகியவற்றை கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலைமுடி வேர்க்கால் முதல் நுனி வரை தடவுங்கள். முடி கொட்டுவது நிற்பதுடன் கருகருவென வளரும்.


02. ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய்ப் பால் தலா ஒரு கோப்பை எடுத்து, வாரம் ஒரு முறை அரைத்து தலைக்குக் குளிக்கலாம். உடல் குளிர்ச்சியாவதுடன் முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தல் வளரத் தொடங்கும்.

03. தேயிலைத்தூள், மருதாணி பவுடர், வெந்தய பவுடர், கடுக்காய்த்தூள், தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் இவற்றைத் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து, ஓரு எலுமிச்சம் பழத்தின் சாறைப் பிழிந்து ஊற்றி தயாரித்துக் கொள்ளுங்கள். மறுநாள் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வையுங்கள். குளியல் பவுடரைத் தேய்த்துக் குளித்தால், முடி உதிர்வது உடனடியாக நிற்பதுடன், கருகருவெனச் செழித்து வளரும்.

04. மாம்பழ விதையில் உள்ள ஓட்டை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் பகுதியை அப்படியே அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 தேக்கரண்டி வேப்பம்பூ மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலையை நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, கடலைமாவு, பயத்தமாவு, சீயக்காய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து அலசுங்கள். இது, முடி உதிர்வதைத் தடுத்து வளர்ச்சியைக் கூட்டும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!