உங்க வீட்டு கொசுப் பிரச்சனையை ஒழிக்க கற்பூரம் மட்டுமே போதும்…!


கொசு தான் பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன. டெங்கு, மலேரியா போன்ற பல கொடூர நோய்களுக்கும் கொசு தான் காரணமாக இருக்கிறது.

ஏன்?… டெங்குவின் தீவிரத்தை நாம் உணர்ந்து கொண்டுதானே இருக்கிறோம். இனியாவது நம் வீட்டுத் தண்ணீரில் கொசுக்களை உற்பத்தி செய்யாமல் விரட்டி, நோய்க்கிருமிகள் அண்டாமல் தடுப்போம்.

கொசுக்களை ஒழிப்பதற்காக வரும் கொசு விரட்டிகளும் மேட்களும் இன்னும் ஏராளமான நோய்களைக் கொண்டு வந்து விடுகின்றனவே ஒழிய கொசுக்களை விரட்டிய பாடில்லை.

ஆனால் நம்முடைய வீட்டில் உள்ள எலுமிச்சைப் பழத்தை வைத்தே கொசுக்களை மிக எளிமையாக விரட்டிவிட முடியும் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.


ஆம். எலுமிச்சை, கிராம்பு மட்டும் போதும் உங்கள் வீட்டுக் கொசுப் பிரச்னையை ஒழிக்க.

தேங்காய் நார்கள் எல்லா கடைகளிலும் கிடைக்கின்றன. அதை வாங்கி வந்து மாலை நேரங்களில் அதை எரித்து அதன் புகை எல்லா அறைகளுக்கும் அந்த புகையைக் காண்பித்துவிட்டு, சிறிது நேரம் கழித்து பாருங்கள் ஒரு கொசு கூட இருக்காது.

கற்பூரத்தைக் கொண்டு கொசுக்களை விரட்டலாம். சல்பர் இருக்குமிடத்தில் கொசுக்கள் இருக்காது. கற்பூரம் சல்பரினால் ஆனாது. ஆனால் கற்பூரம் காற்றில் உடனே கரைந்துவிடும். கற்பூரத்தை தட்டில் வைத்து கொளுத்தி, வீடு முழுவதுமு் அதன் புகையைக் காட்டினாலும் கொசுக்கள் ஓடிவிடும்.

அதோடு நாமே வீட்டிலேயே கொசுக்களை விரட்டும் லிக்விடுகளைத் தயாரிக்கலாம். அதெப்படி?

அதற்குப் பெரிதாக ஏதும் தேவையில்லை. மண்ணெண்ணெய் மற்றும் கற்பூரம் மட்டும் போதும்.


வீட்டின் ஜன்னல் ஓரங்களில் வெள்ளைப்பூண்டை நசுக்கிப் போட்டு வைக்க வேண்டும்.

பிளீச்சிங் பவுடரை தண்ணீரில் கலந்து கொசு அதிகமாக வருமிடங்களில் தெளித்துவிட வேண்டும்.

வேப்பிலை அல்லது நொச்சி இலைகளை நெருப்பில் போட்டு புகை போட்டால் கொசுக்கள் வீட்டுப்பக்கமே அண்டாது.

அதேபோல் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றின் தோலை உலர்த்தி யூக்கலிப்டஸ் இலையுடன் சேர்த்து வீட்டில் புகை போடுங்கள்.

இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது தினமும் ஒரு விஷயத்தையோ வீட்டில் செய்து வர, கொசு பிரச்னையைத் அறவே ஒழிக்க முடியும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!