குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறியும்… செய்யக்கூடாதவையும்!

குரங்கு அம்மை நோய் ஒருவித வைரசால் ஏற்படுகிறது. இந்த வைரசில் இரண்டு தனித்தனி மரபியல் பிரிவுகள் உள்ளன. முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்கா நாடுகளிலும், 2-வது பிரிவு மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளிலும் கண்டறிப்பட்டது.

நோய் பரவுவது எப்படி?

பொதுவாக விலங்குகளிடம் இருந்தே இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடுவதன் மூலமும், அதன் உடல் திரவங்கள் மூலமும் பரவுவதாக கூறப்படுகிறது. குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளில் இறைச்சியை சரியாக வேகவைக்காமல் சாப்பிட்டாலும் இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது.

அறிகுறிகள்

குரங்கு அம்மை நோய் பாதித்தவர்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படும். அதோடு தலைவலி, உடல் வலியுடன் முதுகு வலியும் இருக்கும். மேலும் உடல் நடுக்கம், சோர்வடைதல் போன்றவையும் இந்நோயின் அறிகுறிகளாகும். இந்நோய் பாதிப்பு ஏற்பட்டதும் உடலில் சிகப்பு நிற புள்ளிகள் தோன்றும்.

பின்னர் அவை கொப்புளங்களாக மாறும். 2 அல்லது 3 நாட்களில் இந்த கொப்புளங்கள் உதிர்ந்து விடும். குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் 2 முதல் 4 வாரங்கள் வரை இருக்கும். பொதுவாக நோய் பாதிப்புக்குள்ளாகி 7 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறி வெளிப்படும். இந்நோய் 5 முதல் 21 நாட்கள் வரை இருக்கும்.

செய்யக்கூடாதவை என்ன?

குரங்கு அம்மை நோய் பாதித்தவரின் படுக்கை உள்ளிட்ட எந்தவொரு பொருட்களையும் தொடக்கூடாது. பாதிக்கப்பட்ட நோயாளியிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடக்கூடாது. கைகளை எப்போதும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் போது பாதுகாப்பு உடைகளை அணிந்து செல்ல வேண்டும். முக கவசம் அணியவேண்டும்.

உடலில் தோன்றும் தோல் வெடிப்புகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். வாய்புண்களை வெதுவெதுப்பான உப்பு நீர் மூலம் கொப்பளிக்க வேண்டும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!