வாரத்துக்கு இரண்டு முறை இப்படி செய்தால் வழுக்கையிலும் முடி வளருமாம்..!


ஆண்களுக்கு இருக்கும் அழகுப் பிரச்னைகளில் மிக முக்கியமானது வழுக்கை தான். வழுக்கைக்கு மரபணுக்கள் தான் காரணம் என்றால் அதை சரிசெய்ய முடியாது. கொஞ்சம் கடினமானது. ஆனால் மனஅழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகம் ஆகியவை காரணமாக இருந்தால் அவற்றை சில இயற்கை வழிகள் மூலம் அவற்றை சரிசெய்துவிட முடியும்.

பட்டையில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி- ஆக்சிடண்ட்கள் மற்றும் இதர உட்பொருட்கள் ஸ்கால்ப்பில் உட்சென்று தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டிவிடுகிறது.

ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தடுக்கிறது. தலைமுடியை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது. இது வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.


அதனால் பட்டை, ஆலிவ் ஆயில், தேன் ஆகியவற்றைக் கொண்டு ஒரு நேச்சுரல் பொருளை தயார் செய்யலாம்.

ஆலிவ் ஆயிலைச் சூடேற்றி, அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டை தூளுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து அதை ஹேர் பேக் போட்டு நன்கு மசாஜ் செய்யுங்கள்.

பின் 15 நிமிடங்கள் உலரவிட்டு பின் அலச வேண்டும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்து வந்தால் ஓரிரு வாரங்களிலேயே வழுக்கையில் உள்ள ரத்த செல்கள் தூண்டப்பட்டு மீண்டும் முடி முளைக்க ஆரம்பிக்கும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!