ஒமைக்ரான் ஏற்படுத்தும் பாதிப்பு….. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் நீண்டகால கொரோனா நோயின் சில அறிகுறிகளை உருவாக்குவார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் ஒமைக்ரானாக உருமாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமைக்ரான் நீண்ட கால வைரஸ் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது பல வாரங்களுக்கு பிறகே கண்டறியப்படுகிறது.

ஆரம்ப நோய் தொற்றின் அறிகுறிகள் நீங்கிய 90 நாட்களுக்கு பிறகு எந்த ஒரு நீண்ட கால விளைவுகளும் பொதுவாக தோன்றும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் நீண்டகால கொரோனா நோயின் சில அறிகுறிகளை உருவாக்குவார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சோர்வு, மூளை மூடுபனி, மூச்சுத்திணறல், பதட்டம் மற்றும் பல பிரச்சினைகள் இதன் அறிகுறிகள் ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் நீடித்திருக்கும் நோய் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

ஆனால் லேசான தொற்றுக்கு பிறகும் அது நிகழலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒமைக்ரான் மாறுபாடு வைரஸ் உருவாக கொரோனா வைரசின் டெல்டா பாதிப்பை விட லேசான நோயை ஏற்படுத்துகிறது.

ஆனால் கொரோனா பாதிப்பினால் உயிர் பிழைத்தவர்களில் ஒரு பகுதி ஒமைக்ரான் மாறுபாட்டுடன் மாறும் என்பதை குறிக்கும் எந்த ஆராய்ச்சியையும் பார்க்கவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உடலில் நீண்ட நாட்கள் இருக்கும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!