தலைவலி, மனக்குழப்பத்தை குணமாக்கும் அர்த்த சின் முத்திரை!

அதிக சிந்தனை கட்டுப்பட, மனக்குழப்பம் நீங்க, மூளை சோர்வடைதலை தடுக்க, சுறுசுறுப்பு கிடைக்க, தலைவலி தீர இந்த முத்திரை உதவும்.

தலைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளதாக மருத்துவம் சொல்கிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலையின்றி வலி நிவாரணிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். தலைவலி எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும். அதனுடன், சில முத்திரைகள் செய்வதன் மூலம் விரைவில் குணம்பெற முடியும்.

ஆட்காட்டி விரல் கட்டை விரலின் முதல் ரேகையில் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும்.

பலன்கள்: 10 – 40 நிமிடங்கள் செய்யலாம். அதிக சிந்தனை, மனக்குழப்பம், மூளை சோர்வடைதல், தலைவலி தீர அர்த்தசின் முத்திரை உதவும். அதிக சிந்தனை கட்டுப்பட, மனக்குழப்பம் நீங்க, மூளை சோர்வடைதலை தடுக்க, சுறுசுறுப்பு கிடைக்க, தலைவலி தீர இந்த முத்திரை உதவும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!