தொண்டைக்கு இதமாகவும் சளிக்கு மருந்தாகும் கற்பூரவல்லித் தேநீர்!

தொண்டைக்கு இதமாகவும், சளிக்கு மருந்தாகவும் இருக்கும் இந்த கற்பூரவல்லித் தேநீர். இந்த தேநீரை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்

கற்பூரவல்லி இலைகள் – கைப்பிடி

துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்
டீத்தூள் – 1 1/2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு அல்லது தேன் – தேவைக்கு

செய்முறை

கற்பூரவல்லி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் நறுக்கிய கற்பூரவல்லி இலைகள், துருவிய இஞ்சி, டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

கொதித்ததும் வடிகட்டி அத்துடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருகவும்.

சூப்பரான கற்பூரவல்லித் தேநீர் ரெடி.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!