யாரையெல்லாம் கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்..?

கொரோனா 2-வது அலையில் பலரும் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை எனும் புதிய நோய் உருவெடுத்து பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

கருப்பு பூஞ்சை நோய் யாரை தாக்கும் என்பது குறித்து சுகாதார துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார். புதுவை சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா 2-வது அலையில் பலரும் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை எனும் புதிய நோய் உருவெடுத்து பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டுள்ள நபர்களுக்கும், எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தொற்றில் இருந்து குணமடைந்து வந்தவர்களுக்கு பெருமளவு இந்த நோய் காணப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு ஸ்டீராய்டு உட்கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்றவர்கள், நீண்டகாலம் ஆக்சிஜன் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகள் ஆகியோரை இந்த நோய் பாதிக்கும்.

இந்த நோய்க்குசரியான நேரத்தில் தக்க சிகிச்சை எடுக்காவிட்டால், இந்த நோய் மூக்கின் வழியாக மூளைக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. தலைவலி, முகத்தில் வலி, மூக்கடைப்பு, கருப்பு நிற சளி, கண் வலி, பல்வலி, பல் ஆடுதல், வாய் மற்றும் மூக்கின் உள் பகுதிகளில் கரும்புள்ளிகள் ஆகியவை இந்த நோயில் அறிகுறிகள் ஆகும். இதில் ஏதேனும் அறிகுறிகளில் தென்பட்டால் உடனடியாக மருத்துவரின் உதவியை அணுக வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!