15 மாதத்திற்கு பிறகும் குழந்தை நடக்க ஆரம்பிக்கவில்லை என்றால் மட்டுமே நீங்கள் கவலை கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நடக்க ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு வழிகளை பின்பற்றுவார்கள். சில நேரங்களில் மற்ற குழந்தைகளை பார்க்கும் போது நீங்கள் அவர்களோடு ஒப்பிட்டு வருத்தம் அடைவீர்கள். ஆனால் 15 மாதத்திற்கு பிறகும் குழந்தை நடக்க ஆரம்பிக்கவில்லை என்றால் மட்டுமே நீங்கள் கவலை கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
வாக்கரை தவிர்த்து விடுங்கள். உங்கள் குழந்தையின் இயல்பான, சீரான, நிலையான வளர்ச்சி தடைப்படும்.
குழந்தைகள் நடை பயில்வதில் அவர்களின் எடை ஒரு காரணமாக இருக்கின்றது. குழந்தைகள் பருமனாக இருந்தால் சிறிது தாமதமாகலாம்.
முதல் குழந்தையை விட இரண்டாவது குழந்தை வேகமான நடை பயில்கிறார்கள் என்று நம்பப்படுகின்றது. இதற்கு காரணம் உடன்பிறந்தவர்களின் ஊக்கத்தால் சீக்கிரமே நடை பயில்கிறார்கள்
சில குழந்தைகள் நடக்க ஆரம்பித்த பிறகும், வேகமாக செல்ல தவழ்வார்கள். இது முற்றிகும் இயல்பானது. தங்களுக்கு பிடிமானம் கிடைக்கும் வரை இதை பின்பற்றுவார்கள் அதன் பிறகு எழுந்து வேகமாக நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
குழந்தைகள் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களை நிறுத்தவே முடியாது. நிறுத்தவும் கூடாது. வீட்டில் அவர்களுக்கு பெரும்பாலான பொருட்களை எடுக்க முடியும். அதனால் குழந்தையின் செயலையும், இயக்கத்தையும் தடுக்காமல் வீட்டை அவர்களுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொடுப்பதே அவர்கள் வளர்ச்சி சிறப்பாக அமைய வழிவகுக்கும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!