தினமும் சங்கு முத்திரை செய்பவரா..? இந்த நோய்கள் வரவே வராது..!

தினமும் முத்திரை செய்வதால் பல்வேறு நோய்கள் நம்மை தாக்காமல் பாதுகாத்து கொள்ள முடியும். இந்த வகையில் இன்று சங்கு முத்திரை செய்வதால் எந்த மாதிரியான நோய்கள் வராமல் காத்து கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

செய்முறை :

இடது கை பெருவிரலை படத்தில் காட்டியுள்ளபடி வலது கை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மற்ற விரல்கள் வலது கை விரல்களின் பின்பகுதியில் சாய்த்து வைத்துக்கொள்ளவும். வலது கை பெருவிரல் நுனியால் இடது கை நடு விரல் நுனியை தொட்டுக்கொள்ளவும், மற்ற இடது கை விரல்கள் நடுவிரலை சார்ந்து இருக்கவேண்டும். இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும். இதனால் இதை சங்கு முத்திரை என அழைக்கப்படுகிறது.

இம்முத்திரையை 20 நிமிடங்கள் வரை இருமுறை செய்யலாம்.

பலன்கள் :

தைராய்டு நோய் குணமடைகிறது.

திக்கிப் பேசுவது குணமடைகிறது. குரல் வளம் நன்றாகி பேச்சு நன்றாக வருகிறது.

இந்த முத்திரை நமது தொப்புளுக்கு கீழே உள்ள 72000 நரம்புகளை சக்தியுடன் இயங்கவைக்கிறது.

நல்ல பசி கொடுக்கிறது. ஜீரண சக்தி அதிகமாகிறது. உடலில் உள்ள எரிச்சல் நீங்குகிறது.

அலர்ஜி மற்றும் தோல் நோய் குணமடைகிறது. தொண்டையில் ஏற்படும் நோய்கள் குணமடைகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!