இந்த சிக்கனை அதிகம் சாப்பிட்டால்.. பெண்குழந்தைகளுக்கு ஆபத்து.!

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என பார்க்கலாம்.

நாம் சாப்பிடும் பிராய்லர் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளன. இதை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் பருமன், ரத்த அழுத்தம் மற்றும் இதய கோளாறு போன்ற நோய்களை ஏற்படுத்தும். எனவே பிராய்லர் கோழியை நாம் முழுவதுமாக தவிர்க்க வேண்டும். நாம் அடிக்கடி சாப்பிடுவதன் காரணமாக புற்றுநோய் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் தந்தூரி சிக்கன் மற்றும் கிரில் சிக்கன் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பதே ஆகும்.

எனவே கிரில் மற்றும் தந்தூரியை .அடிக்கடி உண்பதை தவிர்க்கவேண்டும் தற்பொழுது மிகவும் அதிகமா ஏற்படும் பிரச்சினை ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மை. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அடிக்கடி பிராய்லர் கோழியை உண்பது தான். இந்த கோழிகளை வளர்ப்பதற்காக போடப்படும் வேதிபொருட்கள் மற்றும் ஹார்மோன்கள், ஆண்களின் இனப்பெருக்க சக்தியை அதிகமாக பாதிக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.

நாம் இந்த சிக்கனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் அதிக அளவில் ஆண்டிபயாடிக் அதிகளவில் சேரும். இதற்கு முக்கிய காரணம் கோழிகள் வளரும் பருவத்தில் அவற்றின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படும் கெமிக்கல் பெண்களை விரைவில் முதுமையடைய செய்து விடும. மேலும் முக்கியமாக இதில் சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன், பெண் குழந்தைகளை 12 வயதுக்குள் பூப்படைய செய்கிறது. இதற்கு பதிலாக நாட்டு கோழி சாப்பிடுவது மிகவும் நல்லது.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!