குழந்தையின் தொப்புள் கொடி.. அதை பாதுகாப்பது எப்படி.?

குழந்தையின் தொப்புள்கொடியை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதையும், தொப்புளில் எண்ணெய் விடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

தாயின் வயிற்றில் வளரும் குழந்தைகள் ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கியத்தையும் தாயின் கருப்பையிலிருந்து இணைந்திருக்கும் நச்சுக்கொடி மூலம் பெறுவார்கள். தொப்புள் கொடி என்பது வளரும் சிசுவிற்கும், தொப்புள் கொடிக்கும் இடையே உள்ள குழாய் ஆகும். குழந்தை பிறந்தவுடன் ஊட்டச்சத்திற்கு தொப்புள் கொடி தேவைப்படாது. குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி குழந்தையின் உடம்பில் இருந்து எவ்வளவு தூரம் விட முடியுமோ அவ்வளவு தூரம் வெட்டிவிட வேண்டும். இதில் பல அற்புத நன்மைகள் உள்ளது. ஒரு 62 வயது முதியவர் ஒருவர் இடது கண் பார்வை மோசமாக உள்ளது எனக் கூறி மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண் நன்றாக இருப்பதாகவும், ஆனால் கண்ணுக்கு வரும் நரம்புகள் வரண்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

அறிவியல் கூற்றுப்படி கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் பொழுது அதன் மூலமாகவே குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் செல்கின்றது. அறிவியலின் கூற்றுப்படி ஒரு மனிதன் இறந்த மூன்று மணி நேரத்திற்கு தொப்பு வெதுவெதுப்பாக தான் இருக்குமாம். முழுமையாக ஒரு குழந்தை உருவாவதற்கு 270 நாட்கள் அல்லது ஒன்பது மாதங்கள் ஆகின்றது. உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தொப்புளுக்கு பின்னால் 72 ஆயிரத்துக்கும் அதிகமான நரம்புகள் உள்ளன.

நம் தொப்புளில் சிறிது எண்ணைய் விடுவதன் மூலம் நரம்புகள் வறட்சி அடைவது தடுக்கப்படுகிறது. இதனால் கண்கள் வறட்சி. கண் குறைபாடு, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவினை, மூட்டுவலி, நடுக்கம், உடல் வலி, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது. தினமும் 3 ஸ்பூன் கடுகு எண்ணையை தொப்புளில் விட்டு தொப்புளை சுற்றி பரவ விடவும். இதன் மூலம் பல நன்மைகள் நமது உடம்பிற்கு கிடைக்கின்றது.

ஏன் தொப்புளில் எண்ணெய் விடவேண்டும்?

தொப்புளில் எண்ணெய் விட எந்த நரம்பில் ரத்தம் வரண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளில் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புளை அந்த எண்ணையை சிறிது விடுவதன் மூலம் வறண்ட நரம்புகள் அனைத்தும் திறக்கப்படுகிறது. சிறு குழந்தைக்கு வயிற்றுவலி என்றால் பெரியவர்கள் காய பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் வயிற்றுவலி குணமாகும்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!