ஆவி பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

ஆவி பிடித்தல் என்பது ஒரு மிக முக்கியமான பல்லாண்டு காலமாக நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்து வரும் ஒரு அற்புதமான மருத்துவக் கலை. இதற்கு சித்தர்கள் தனி முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

அதிலும் இந்த நோய்க்கு மிகச் சிறந்த மருத்துவம் ஆவிபிடித்தல் மட்டுமே. நல்ல சூடான ஆவி வரும் தண்ணீரை போர்வையால் மூடி நாம் சுவாசிக்க அந்த ஆவி நம்முடைய நாசி வழியாக உள்ளே மெதுவாக சென்று நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும்.

ஆவி பிடித்துக் கொண்டிருக்கும் போது வியர்வை அதிகளவில் வெளியேறும். ஆவி பிடித்து முடித்த பிறகு ஆவி பிடித்த போர்வையை, வேர்வையை துடைத்த துண்டை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது.

யாரையும் தொடக்கூடாது. ஆவிப் பிடித்தால் உடனே அந்த துணிகளை கொதிக்கும் சூடான நீரில் வைத்து துவைத்துப் போட வேண்டும். மஞ்சள், மிளகு, எலுமிச்சை, இஞ்சி, துளசி இதையெல்லாம் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கும் போது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

ஆனால் ஆவி பிடிக்கும் போது அதிக நேரம் ஆவி பிடிக்க கூடாது. உங்களால் சூடு தாங்க முடிந்த அளவில் ஆவி பிடியுங்கள். ஒருவர் ஆவி பிடித்த துணியில், தண்ணீரில் இன்னொருவர் ஆவி பிடிக்கக்கூடாது. இதனால் கிருமித் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.- source: webdunia * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!