சர்க்கரை நோயாளிகள் கொண்டைக்கடலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா..?

சர்க்கரை நோயாளிகளுக்கு கொண்டைக்கடலை மிகப்பெரிய அற்புத மருந்தாக அமையும்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதன்படி கருப்பு கொண்டைகடலை உடல் நலத்திற்கு பல்வேறு வழிகளில் உதவுகிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. எல்டிஎல் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. நார்ச்சத்து நிரம்பியதால் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. பித்தத்தை வெளியேற்ற உதவுகிறது. இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகையை தடுக்கிறது. ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!