இருமல், சளியை குணமாக்கும் வெற்றிலை ரசம்… எப்படி செய்வது..?

சளி, தொண்டை வலி, இருமல் பிரச்சனைக்கு வெற்றிலை விரைவில் நிவாரணம் தரும். இன்று வெற்றிலை வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

வெற்றிலை – 6,

புளி – எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
பழுத்த தக்காளி – 2,
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்,
மிளகு – சீரகப் பொடி – ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் (வேகவைத்து நீர் விட்டு கரைக்கவும்),
எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

  • தக்காளி, வெற்றிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • புளியை நீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.
  • கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்றாக வதங்கியதும் இதனுடன் மஞ்சள்தூள், உப்பு புளிக்கரைசல், பருப்புத் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
  • நெய்யில் தனியாத்தூள், மிளகு – சீரகப் பொடியை வறுத்து, கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கவும்.
  • உடனடியாக நறுக்கிய வெற்றிலையை போட்டு மூடிவிடவும். 15 நிமிடத்துக்குப் பிறகு பரிமாறவும்.
  • சூப்பரான வெற்றிலை ரசம் ரெடி.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!