வாரத்திற்கு ஒரு முறை இஞ்சிச்சாறு பருகினால் நடக்கும் அற்புதம்..!

இஞ்சியின் மருத்துவ பயனானது வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசியை தூண்ட கூடியதாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கியாகவும் , வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகின்றது. 200 கிராம் அளவில் இஞ்சியை எடுத்துக்கொண்டு தோல் நீக்கி சிறிய துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சரியாக 48 நாள்கள் கழித்து பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.

இஞ்சியின் மருத்துவக் குணங்கள் பற்றி காண்போம் :

இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு , எலுமிச்சப் பழச்சாறு 30 மில்லி அளவுடன் தேன் 15 மில்லி கலந்து அடிக்கடி குடித்து வந்தால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

இஞ்சி சாறினை பாலில் கலந்து குடித்தால் வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி துவையல், இஞ்சி பச்சடி ஆகியவை உணவில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல், உடல் களைப்பு, மார்பு வலி நீங்கும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதக் கோளாறு நீங்கும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட வந்தால் பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும் , உடலில் சுறு சுறுப்பு ஏற்படும்.

தினமும் காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று மற்றும் மலச்சிக்கல் தீர்ந்து உடல் இளமை பெறும்.

10 கிராம் அளவிலான இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை என இரண்டு நாட்கள் பருகி வந்தால் மார்பு வலி தீரும்.

இஞ்சி,நல்லமிளகு, சீரகம்… இந்த மூன்றையும் ஒன்றாக அரைத்து உட்கொண்டால் பித்தம், வாதம், பசியின்மை, அஜீரணக் கோளாறுகள், வாயுத்தொல்லை, புளித்த ஏப்பம், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, குளிர் காய்ச்சல், காய்ச்சல் ஆகியவை நீங்கும்.

வாரத்திற்கு ஒரு முறை இஞ்சிச்சாறு பருகினால் உடல் அசதி நீங்கும்.

இஞ்சியைத் தோல் நீக்கி , நறுக்கி நல்லெண்ணெயில் காய்ச்சி நுரை வற்றியதும் சூடு தனிய வைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் உடலுக்கு வலிமையாகும்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!