கொத்தவரங்காய் சாப்பிட்டால் இந்த நோய்கள் உங்களை தாக்காது..!

கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த நோய் உள்ளவர்கள், பத்தியம் இருந்து மருந்து சாப்பிடுவோர் கண்டிப்பாக கொத்தவரங்காய் சாப்பிடக்கூடாது.


கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக புரதம், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவை இதில் அதிகமாக உள்ளது. வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இரும்புச்சத்து இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.

கொத்தவரங்காய் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ உங்கள் கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

கொத்தவரங்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உங்களை வயிற்று புண்களில் இருந்து பாதுகாக்க உதவும். வாதம் மற்றும் பித்தம் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை இது அதிகப்படுத்தும்.

கொத்தவரங்காய்க்கு எப்பொழுதும் நோய் தீர்க்கும் தன்மையானது குறைவு. பத்தியம் இருந்து மருந்து சாப்பிடுவோர் கொத்தவரங்காயை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பத்தியம் முறிவு உண்டாகும். எடுத்துக்கொண்ட மருந்து வேலை செய்யாமல் போகும்.

கொத்தவரங்காய் சாப்பிட்டு வர எலும்பு மற்றும் பல்லானது உறுதிப்படும். பித்தமயக்கம் ஏற்படுவதை தடுக்கும். மாலைக்கண் நோயை குணப்படுத்தும். கொத்தவரங்காயில் காணப்படும் அதிக அளவு நார்ச்சத்து இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

கொத்தவரங்காய் ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாது. மேலும், நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கு கொத்தவரங்காய் உதவி புரியும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!