புற்றுக் கோயிலுக்குச் சென்று, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமை ராகுகால வேளையிலும் புற்றுக்கு பால் வார்த்து நாகராஜ காயத்ரியைச் சொல்லி வழிபடுங்கள்.
ஸ்ரீநாகராஜ காயத்ரி
ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹே
நாகமணி சேகராய தீமஹி
தந்நோ நாகேந்த்ர ப்ரசோதயாத்
அதாவது, சர்ப்பங்களின் மன்னனே. பேரொளியைக் கொண்ட நாகமணியை வைத்திருப்பவனே. நாகதேவனே. எங்களையும் எங்கள் குலத்தையும் காத்தருள்வாய் என்று அர்த்தம்.
இந்த நாகராஜ காயத்ரியைச்சொல்லுங்கள். வழிபடுங்கள். அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமை ராகுகால வேளையிலும் புற்றுக்கு பால் வார்த்து வழிபட்டு வாருங்கள். கால சர்ப்ப தோஷம் நீங்கும். திருமண வரம் கைகூடும். உத்தியோகம் நிலைக்கும். தம்பதி இடையே ஒற்றுமை நீடிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.- source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!