வீதியில் பெண்களை பார்த்தாலே கட்டிபிடிக்கும் மகன்.. 65 வயது பாட்டியால் நடந்த விபரீதம்.!


பாஸ்கரன் என்ற நபர் தெருவில் எந்த பெண் நடந்து சென்றாலும், அவர்களை ஓடிப்போய் கட்டிப்பிடித்து டார்ச்சர் செய்பவர். ஆனால், 65 வயசு பாட்டி பாஸ்கரனின் கழுத்தில் மின்கம்பியை சுற்றி, கயிற்றால் கட்டி, மிதித்து தெருவில் இழுத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குப்பாயி65 வயதானவர். இவர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வாணக்கார தெருவில் வாழ்ந்து வருகிறார். குப்பாயி பாடிக்கு 2 மகன்கள் உள்ளனர். பாட்டியின் மூத்த மகன் பாஸ்கரன். இவருக்கு வயது 36. பாஸ்கரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது 2வது மகன் பிரபாகரன். இவருக்கு வயது 31. பிரபாகரன் திருமணம் ஆனவர்.

பாஸ்கரன் தனது தாய் குப்பாயியிடம் 36 வயசாகியும் எனக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என்று அடிக்கடி சண்டை போடுவது வழக்கம். ஆனால் குப்பாயி பாட்டி தனது மகன் பாஸ்கரனுக்கு மதுப்பழக்கம், கஞ்சா பழக்கம் ஆகியவை இருப்பதால், எந்த பெண்ணையும் இவருக்கு கல்யாணம் செய்து வைத்து அந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க அவர் விரும்பவில்லை. அதனால், குப்பாயி பாட்டி எவ்வளவோ புத்தி சொல்லி உள்ளார். ஆனால் பாஸ்கரன் எவ்வளவு சொல்லியும் திருந்தவில்லை.

இதனால் பாஸ்கரன் ஆத்திரம் அடைந்துள்ளார். ஆத்திரத்தில், தெருவில் செல்லும் பெண்களை கட்டிப்பிடிக்க முயற்சி செய்வது, பெண்களின் பின்னாடியே செல்வது அவர்களுக்கு டார்ச்சர் தருவது, ஏன் என்று யாரும் கேட்டால், அவர்களிடம் விடாமல் தகராறு செய்வது என பாஸ்கரன்தினமும் அட்டூழியம் செய்து வந்துள்ளார். இப்படி செய்தால் தான், வீட்டில் கல்யாணம் செய்து வைப்பார்கள் என்று நினைத்து அவர் இப்படி தெருவில் ஒரு பெண்களையும் விடாமல் டார்ச்சர் தந்துள்ளார் பாஸ்கரன்.

சம்பவம் நடந்த அன்று இரவு, நடுத்தெருவில் நின்று பாஸ்கரன் வழக்கம் போல் செய்து கொண்டிருந்தார். இதனால், பொறுத்து பார்த்த குப்பாயி ஆவேசம் அடைந்துள்ளார். அதனால், தனது இன்னொரு மகன் பிரபாகரனை துணைக்கு அழைத்து கொண்டார். இருவரும் சேர்ந்து ஒரு மின் கம்பியை பாஸ்கரனின் கழுத்தில் கட்டினர். மற்றொரு கயிறை எடுத்து பாஸ்கரனின் உடம்பில் கட்டி தூக்கி போட்டு அங்கேயே மிதித்துள்ளார், குப்பாயி பாட்டி.

பாட்டி, ஒரு கட்டையை எடுத்து சரமாரியாக பாஸ்கரனை தாக்கி, தெருவில் அவரை இழுத்து கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கதவை அடைத்தாகிவிட்டது. அதன் பின் ஒரு சத்தமும் வீட்டிற்குள் இருந்து கேட்கவில்லை. மறுநாள் காலையில், பாஸ்கரன் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் அழுதுள்ளனர். பாஸ்கரனின் இறுதி சடங்குக்கும் அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவிட்டது. ஆனால், அக்கம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு ஸ்ரீமுஷ்ணம் போலீசில் இரவு நடந்த விஷயத்தை சொல்லி, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்பாஸ்கரனின் சடலத்தை கைப்பற்றினர். அபோது தான், பாஸ்கரனை பாட்டி அரிவாளாலால் வெட்டியது தெரியவந்துள்ளது. பாஸ்கரனின் சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்ய, விருத்தாசலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. இந்த சம்பவம் குறித்து விஏஓ ரங்கசாமி கொடுத்த புகாரின் பேரில் குப்பாயி மற்றும் பிரபாகரனைபோலீஸ் கைது செய்தது.- source: 1news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!