தினமும் செல்போனுடன் உறங்குவது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா..?


செல்போனுடன் உறங்குவது எவ்வளவு ஆபத்தானது என்று இங்கே அறிந்து கொள்ளலாம்.

செல்போன்கள் பயன்படுத்தாத நபர்கள் யாரும் இல்லை என்று கூறும் அளவிற்கு பரந்து விரிந்துவிட்டது. செல்போனுடன் விழித்து, அதனுடனே நாள் முழுவதும் வேலை செய்து, உறங்கும் தருவாயிலும் செல்போனுடனே இருக்கிறோம்.

இந்நிலையில் கலிபோர்னியா சுகாதாரத்துறை ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதன்படி, செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் ஒருவித ரேடியோ அதிர்வலைகள் செல்போன் மூலம் நம்மைத் தாக்குவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் மூளையில் கட்டிகளுடன் வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர், 10 ஆண்டுக்கும் மேலாக செல்போனை அருகில் வைத்து உறங்கும் பழக்கம் கொண்டவர்கள்.

எனவே உறங்கும் போது, படுக்கையில் இருந்து செல்போனை தொலைவில் வைத்துவிடுவது நல்லது.-
Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!