வாட்ஸ்அப்பில் விரைவில் வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்..!


வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் பலருக்கும் அனுப்பக்கூடிய ஸ்பேம் மெசேஜ்களை தடுக்கும் வசதியை புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் 2.17.430 பதிப்பில் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேம் மெசேஜ்களை தடுக்கும் வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் புதிய அம்சங்களை பீட்டா பதிப்பில் சோதனை செய்யும் WABetaInfo வலைத்தளத்தில் புதிய அம்சம் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுவதாகவும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் இந்த அம்சம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவரது காண்டாக்டில் இடம்பெற்றிருக்கும் அனைத்து காண்டாக்ட்களுக்கும் ஒரே சமயத்தில் குறுந்தகவல்கள் அனுப்புவதை ஸ்பேம் என அழைக்கின்றோம். ஸ்பேம் மெசேஜ்களை எந்த ஸ்பேமரும் ஒருவருக்கு மட்டும் அனுப்புவதில்லை. காண்டாக்ட் லிஸ்ட்-இல் இடம்பெற்றிருக்கும் அனைத்து காண்டாக்ட்களுக்கும் ஸ்பேம் மெசேஜ்கள் அனுப்பப்படுகிறது.


இவ்வாறான மெசேஜ்களில் போலி செய்திகள், விளம்பரம், அல்லது காண்டாக்ட்களை குறிப்பிட்ட குறுந்தகவலை மற்றவர்களுக்கு அனுப்ப கோரும் என WABetaInfo வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் வாட்ஸ்அப் ஃபாவேர்டு அம்சம் மூலம் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட குறுந்தகவல்களை ஒரே சமயத்தில் பலருக்கும் அனுப்பும் போது, இந்த தகவல் பலமுறை ஃபார்வேர்டு செய்யப்பட்டுள்ளது என்பதை வாட்ஸ்அப் சார்பில் தெரிவிக்கப்படும்.

மேலும் ஒரு குறுந்தகவலை பலருக்கும் அனுப்ப, செயலியில் உள்ள பிராட்காஸ்ட் லிஸ்ட் அம்சத்தை பயன்படுத்த வாட்ஸ்அப் சார்பில் கேட்டு கொள்ளப்பட இருக்கிறது. பிராட்காஸ்ட் லிஸ்ட் அம்சத்தை பயன்படுத்தும் போது குறுந்தகவல் அனுப்புவோரின் காண்டாக்ட் மற்றவரின் அட்ரஸ் புக்கில் சேமிக்கப்பட்டிருந்தால் மட்டுமே பெற முடியும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!