பொங்கல் தினத்தன்று தொண்டர்களை சந்திக்கும் கருணாநிதி..!


தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று கட்சித் தொண்டர்களை கோபாலபுரம் வீட்டில் சந்திப்பது வழக்கம்.

அன்றைய தினத்தில் அனைவருக்கும் புத்தம் புது 10 ரூபாயை கருணாநிதி வழங்குவார்.

ஆனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த பொங்கலுக்கு அவர் யாரையும் சந்திக்கவில்லை. மு.க.ஸ்டாலினை கட்சியினர் சந்தித்து சென்றனர்.

ஆனால் இந்த ஆண்டு கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் பொங்கலுக்காக நாளை கட்சித் தொண்டர்கள்-நிர்வாகிகளை சந்திக்க கோபாலபுரம் வீட்டில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக குடும்ப டாக்டர் கோபாலிடம் மருத்துவ ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறது. நாளை காலை 11 மணிக்கு மேல் தொண்டர்களை கருணாநிதி சந்திக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதையொட்டி கோபாலபுரம் வீட்டை மலர்களால் அலங்கரித்து வருகின்றனர். கரும்பு, வாழை மரம், தோரணங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

பொங்கல் தினத்தன்று கருணாநிதி தொண்டர்களை சந்திக்க இருப்பது கட்சியினர் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!