இரவில் கற்பூரத்தை இதயத்தில் கட்டி உறங்குவதால் என்ன நன்மைகள் தெரியுமா..?


கற்பூரத்தை நாம் ஆரத்தி எடுக்க மற்றும் கடவுளை வணங்கும் போது பயன்படுத்தப்படும் ஆன்மீகப் பொருளாகத்தான் பார்க்கிறோம். ஆனால் இதில் அடங்கியிருக்கும் நன்மைகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்.

கற்பூரத்தில் நன்மை இருக்கின்றது என்பதற்காக சாப்பிட வேண்டுமா என்று கேட்க வேண்டாம், கற்பூரம் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல, அதன் வாசனையே சுவாசத்திற்கு நல்லது.சிலருக்கு கற்பூரம் நேரடியாக சருமத்தில் படும் போது சரும கோளாறுகள் உண்டாகலாம்.

அதனால், இதை ஒரு சிறு துணியில் கட்டி, கயிற்றில் கோர்த்து கழுத்தில் தொங்கவிட்டு பயன்படுத்தலாம்.அது சரி, இனி இரவு முழுவதும் கற்பூரத்தை இதயத்தில் கட்டி உறங்குவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.

இரத்த ஓட்டத்தை சீராக்க ஊக்கப்படுத்துகிறது.இது வாயுத்தொல்லை, வாயுவால் வயிறு வீக்கம் அடைவது போன்றவை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.மேலும் இது செரிமானம் சீராகுவதற்கும் உதவுகிறது.
கற்பூரம் சளித்தொல்லை நீங்க வெகுவாக உதவுகிறது.

சளி மட்டுமின்றி சுவாசகோளாறுகளுக்கு நல்ல தீர்வையும் இது அளிக்கும்.இதன் வாசம் சுவாசிப்பது நுரையீரலை சுத்தம் செய்ய உதவுகிறது.கற்பூர எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது தசை மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கிறது.-

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!