இருமல், சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த டீ குடிங்க..!


இருமல், சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த கற்பூரவள்ளி டீயை பருகலாம். இன்று இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கற்பூரவள்ளி இலைகள் – 5,

இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்புன்,
டீத்தூள் – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
தேன் – தேவைக்கு,
தண்ணீர் – 2 கப்.

கற்பூரவள்ளி

செய்முறை :

கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் டீத்தூள், இஞ்சித் துருவல், ஓமவல்லி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பிறகு வடிகட்டி தேவையான அளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!