ராகு – கேதுவால் ஏற்படும் சர்ப்ப தோஷத்திற்கு இந்த பரிகாரம் செய்தால் நீங்கி விடுமாம்..!!


ராகு, கேதுகளால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், ஸ்ரீகாளஹஸ்தியில் சனிக்கிழமை ராகு காலத்தில் சர்ப்ப தோஷ நிவர்த்தி செய்துகொள்வது நல்லது. ராகு ப்ரீதிக்கு காலன், சர்ப்பேஸ்வரன் ஆகியோரை வழிபடுவதும் உளுந்து தானம் செய்வதும் நல்லது. அறுகம்புல்லால் ஹோமம் செய்யலாம். ஞாயிறு அன்று திருநாகேஸ்வரம் சென்று, ராகு காலத்தில் ராகுவுக்குப் பால் அபிஷேகம் செய்வது நல்லது.

கேது தோஷம் நீங்க, கீழ்ப்பெரும்பள்ளம் சென்று வழிபடுவது விசேஷம். மேலும், கணபதி ஜபம், ஹோமம் செய்யலாம். பிரம்மாவையும், சித்திரகுப்தனையும் வழிபடுவது விசேஷமாகும். தர்ப்பையால் ஹோமம் செய்து, கொள்ளு தானியம் அளிப்பதும் சிறப்பாகும்.

Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!