ஆலயத் தேர்த் திருவிழாவுக்குச் புடவை வாங்கித் தராததால் மனமுடைந்த 18 வயது பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இந்தச் சம்பவம் கொடிகாமம் எருவனில் நேற்று இடம்பெற்றுள்ளது.
யாழ். வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்பாள் ஆலயத் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் (09.06.2018) இடம்பெற்றது. இந்நிலையில் தனது பாடசாலைத் தோழிகள் புடவைகள் அணிந்து ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என்பதால் நானும் புடவையணிந்தே ஆலயத்திற்குச் செல்ல வேண்டுமென தாயாரை வற்புறுத்தியுள்ளார்.
இவருக்கு புது உடை வாங்கிக் கொடுத்தால் ஏனைய இரு பிள்ளைகளுக்கும் புது உடைகள் வாங்க வேண்டுமென்பதால் தனது கஷ்கரமான சூழ்நிலை காரணமாக உடைகள் வாங்கிக் கொடுக்கவில்லை. இதன்போது மாணவி திருவிழாவுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டிலுள்ள அனைவரும் ஆலயத்தின் தீர்த்தோற்சவத்துக்குச் சென்ற நிலையில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆலயத்திலிருந்து வீடு திரும்பிய குடும்பத்தினர் மாணவி தவறான முடிவெடுத்துள்ளமை கண்டு அதிர்ச்சியடைந்து கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த மாணவியின் குடும்பத் தலைவரான தந்தை, தனியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.-Source: metronews
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!