பிரபல டிவியின் முக்கிய பிரபலம் மேடையிலேயே கைது..!! அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்..!!


பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலம். இந்த நிகழியானது பல நல்ல திறமையான கலைஞர்களை உருவாக்கி வெள்ளி திரைக்கு அனுப்பியுள்ளது. அந்த வகையில் நடிகர் சிவர்த்திகேயனை சொல்லலாம்.

இந்நிலையில், கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன நவீன் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நவீன் கடந்த 2016ம் ஆண்டு திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இதற்கிடையில் நவீன், மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை திருமணம் செய்ய முயற்சிசெய்து உள்ளார். இதனை அறிந்த அவரின் மனைவி, தனது கணவரின் இரண்டாவது திருமணம் பற்றி திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் நவீனுக்கும் திவ்யாவிற்கும் நடந்த திருமண ஆவணங்களையும் காவல் நிலையத்தில் கொடுத்து தனக்கு நீதி வழங்குமாறு கேட்டுள்ளார். புகார் மனுவை பெற்று கொன்ற போலீசார்,பின்பற்று காலை நடக்கவிருந்த நவீனின் இரண்டாவது திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தி, நவீனை நிகழ்ச்சி மேடையிலேயே போலீசார் கைது செய்தனர். இந்த விடயம் தமிழ் திரை உலகத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


தொடர்ந்து விஜய் டிவியின் பிரபலங்கள் பல சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகின்றனர். சின்னத்திரையில் நல்ல பெயரை வாங்கி கொண்டிருக்கும் இந்த தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து இதுபோல் சிக்கலில் மாட்டுவது பலராலும் விமர்சனம் செய்யபட்டு வருகிறது.-Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!