விரைவில் மீண்டும் இந்தியா வரும் டிக்டாக்!

பைட்டேன்ஸ் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலியை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் டிக்டாக் செயலி மீண்டும் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் இந்திய காப்புரிமை அலுவலகத்தில் TickTack எனும் பெயருக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. அதன்படி டிக்டாக் செயலி TickTack பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பைட்டேன்ஸ் நிறுவனம் டிக்டாக் செயலியை மீண்டும் இந்தியாவில் வெளியிடும் முயற்சியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மேலும் இந்தியாவில் சமீபத்தில் அமலுக்கு வந்த புது தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்று செயல்பட பைட்டேன்ஸ் ஒப்புக் கொள்வதாக அறிவித்தது. இதற்கென 2019 வாக்கில் பைட்டேன்ஸ் குறைதீர்க்கும் அதிகாரியை நியமித்தது.

சமீபத்தில் பப்ஜி மொபைல் கேம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா எனும் பெயரில் வெளியிடப்பட்டது. முந்தைய கேமினை போன்றே புதிய பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமும் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!