கோலி தனது பிறந்தநாளை மனைவி அனுஷ்காவுடன் வித்தியாசமாக கொண்டாடியுள்ளார். விராட் கோலி நேற்று அவரது 31வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விராட் கோலியின் பிறந்தநாளை அவரும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் பூட்டானில் அமைதியான முறையில் கொண்டாடியுள்ளனர். அங்குள்ள மலைப்பகுதியில் அனுஷ்காவும் விராட் கோலியும் டிரெக்கிங் சென்றுள்ளனர். அப்பொழுது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அனுஷ்கா சர்மா.
இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டார். அதில், “இன்று 8.5 கிலோ மீட்டர் மலையேறியபோது அங்கிருந்த சிறிய கிராமத்தில் 4 மாத கன்றுக்குட்டி ஒன்றுக்கு உணவளிக்க சென்றோம். கன்றுக்குட்டி இருந்த வீட்டின் உரிமையாளர் எங்களை களைப்பாக இருக்கிறதா என்று கேட்டதுடன், டீ வேண்டுமா என்றார்.
நாங்கள் யார் என்று அவர்களுக்கு முற்றிலும் தெரியாது, ஆனால் அவர்கள் எங்களை அத்தகைய அரவணைப்பு மற்றும் அன்புடன் நடத்தினர். அது மறக்கமுடியாத தருணம் என பதிவிட்டுள்ளார் அனுஷ்கா சர்மா.-Source: spark
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!